கள்ளச்சாரம், போலி மதுபானம் அதிகரிப்பை கண்டித்து. திருப்பூர், குமரன் சிலை முன் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
1hours ago
2 / 18
தனியார் பணியாளர்களை நியமிப்பதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள், போராட்டம் நடத்திய நிலையில், சென்னை ஸ்பென்சர் சிக்னல் அருகே பேருந்துகளுக்காக காத்திருந்த பயணியர்
1hours ago
3 / 18
சென்னை மாநகரப் பேருந்துகள் திடிரென நிறுத்த பட்டதால் காத்திருந்த பயணிகள் .இடம்: சென்ட்ரல்.
1hours ago
4 / 18
கோவை பகுதியில் பெய்த மழையால் ரோட்டில் சூழ்ந்த மழை நீர். இடம்: தடாகம் ரோடு இடையர்பாளையம் பகுதி.
3hours ago
5 / 18
பிரதமர் மோடி ஒன்பது ஆண்டு சாதனையையொட்டி புதுச்சேரி கிரீன் பார்க் ஹோட்டலில் மத்திய அமைச்சர் முருகன் மாநில தலைவர் சாமிநாதன் அமைச்சர்கள் நமச்சிவாயம்,சாய்சரணகுமார் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
3hours ago
6 / 18
அக்னி வெயிலின் கடைசி நாளான இன்று சென்னையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தையின் தலையை சேலையால் மூடிக் கொண்டு செல்லும் பாட்டி. இடம். பட்டினப்பாக்கம் ,சென்னை.
4hours ago
7 / 18
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த தமிழறிஞர்கள் நன்றி கூறும் விழாவில் கவர்னர் தமிழிசைக்கு தமிழறிஞர்கள் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது.
6hours ago
8 / 18
விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சங்கம் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பாண்டியன் பேசினார்.
7hours ago
9 / 18
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்ணாமுலை அம்மன் சன்னதி முன், தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது.
8hours ago
10 / 18
விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
10hours ago
11 / 18
ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணுக்கு சென்ற ஜி.எஸ்.எல்.வி., எப்.12 ராக்கெட்டை பார்வையிட வந்த பார்வையாளர்கள் அங்குள்ள கண்காட்சியை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
12hours ago
12 / 18
சென்னை, வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிச்சாமி நாடார் பள்ளியில், 1982ல் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
15hours ago
13 / 18
திருப்பூர் நஞ்சராயன குளத்தில் உள்ள தண்ணீரை மெயின் மதகை திறந்து வெளியேற்றி வருகின்றனர். இதனால் குளத்தில் தண்ணீர் வற்றி அங்குள்ள பறவைகள் வெளியேறும் அபாயம் உள்ளது.
16hours ago
14 / 18
திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ சேவைகள் கட்டிட திறப்பு விழா நடந்தது.
21hours ago
15 / 18
தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி பகுதியில் அரிசி கொம்பன் காட்டு யானை முகாமிட்டுள்ள பகுதிக்குள் செல்ல பத்திரிக்கையாளர், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கபட்டு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
21hours ago
16 / 18
சென்னை, ராயபுரம், அண்ணா பூங்காவில் பிரமாண்ட நுழைவாயில் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
21hours ago
17 / 18
திருப்பூர், வெள்ளி விழா பூங்காவில் விடுமுறை நாட்களில் குவிந்த பொதுமக்கள்.
21hours ago
18 / 18
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடந்த சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் வன உயிரியல் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் பேசினார் அருகில் ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், பேராசிரியர் ராமகிருஷ்ணன்.