நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

10-ஏப்.,-2020
1 / 10
மிரட்டிய மேகம்: மாலை நேரத்தில் கடுமையான காற்று அடித்து மழை வருவது போல் மேக மூட்டங்கள் சூழ்ந்துகொண்டது. இடம்: திண்டிவனம் புதுச்சேரி நெடுஞ்சாலை
2 / 10
விழிப்புணர்வு ஓவியம்: பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு மெகா வரைபடம் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் வரையப்பட்டுள்ளது
3 / 10
காற்றும் மழையும்: விழுப்புரத்தில் நேற்று மாலை பொழுதில் பலத்த காற்றுடன் மழை பெய்தது : இடம் : கலெக்டர் அலுவலகம்
4 / 10
திரண்ட மேகங்கள்: விழுப்புரம் நகரில் மாலை பொழுதில் வானத்தில் கரும் மேகம் சூழ்ந்ததால் இருள் சூழ்ந்து காணப்படும் சாலை. இடம்: விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு
5 / 10
சமூக விலகல் எங்கே: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்னதான் அரசு சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னாலும் இன்னமும் ரேஷன் கடைகளில் ஆட்டுமந்தை போல் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்கும் இவர்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு எப்போதுதான் ஏற்படும். இடம்: கோவை கோவில்மேடு அருகே
6 / 10
காணல் நீர்: சுட்டெரிக்கும் வெயிலில் ரோட்டில் தோன்றிய கானல் நீரில் மிதந்து வரும் வாகனங்கள். இடம்: தேனி - போடி விலக்கு.
7 / 10
தர்பூசணி பழங்கள்: கோடை வெயிலை தணிக்க திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்த தர்பூசணிகள் ஊரடங்கு உத்தரவால் விற்பனையாகமல் தேங்கியுள்ளது
8 / 10
பக்தர்கள் இல்லை: கொரோனா ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி உள்ளது.இடம்.விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்கோயில்.
9 / 10
கவலை இல்லை: என்ன தான் கொரோனா கோர தாண்டவம் ஆடினாலும் அதை பற்றி சிறிதும் கவலை பயபடாமல் இதுவும் கடந்து போகும் என்று தங்கள் நிலங்களில் விளைந்த பயிரை காப்பாற்ற உரம் போடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடம்: விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம்
10 / 10
எங்கள் ராஜ்யம்: சென்னை கடற்கரையில் உணவு கிடைக்காத காரணத்தினால் கடற்கரை சாலைக்கு இடம்பெயர்ந்த காக்கைகள்
Advertisement