தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடு திருநாளாகும். அன்று பட்டாசுகளை வெடிப்பது தொடர்பான தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையன்று, காலை, 6:00 முதல் 7:00 மணி வரையும். இரவு 7:00 முதல் 8:00 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள இரண்டு மணி நேரம் தவிர, மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்
குறைந்த ஒலி, குறைந்த காற்று மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்தவெளியில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் வாயிலாக முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளையும் தவிர்க்க வேண்டும்
மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது
குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது.