டீப் பேக் பற்றிய விழிப்புணர்வு அவசியம் : ராஷ்மிகா

ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் அச்சு அசல் உண்மை போலவே தோற்றமளிக்கும் போலி படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் 'டீப் ஃபேக்ஸ்' .

இந்த தொழில்நுட்பம் மூலம் சினிமா நடிகைகளின் போலியான டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன.

ராஷ்மிகா, கஜோல், கத்ரீனா கைப், ஆலியாபட், அபிராமி... என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன நடக்கும். உண்மையில் அந்த பெண்களை நினைத்து பயம் வருகிறது. - ராஷ்மிகா

இதனால் டீப்பேக் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் - ராஷ்மிகா

டீப்-பேக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இதை உருவாக்கியவன் மிகப்பெரிய குற்றவாளி, அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி. - அபிராமி

மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தற்போது நான் பேசுகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக நான் போலீசிலும் புகார் அளிக்க முடிவெடுத்து இருக்கிறேன் - அபிராமி