குருதோங்மர்... மிக உயரமான ஏரி இது !

வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் இமயமலை தொடரிலுள்ளது 'குருதோங்மர்' ஏரி, இந்தியாவின், 'மிக உயரமான ஏரி' என அழைக்கப்படுகிறது.

உலகின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகவும் உள்ளது.

நன்னீர் ஏரியான இது சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து 190 கி.மீ., துாரத்திலுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 16,929 அடி. பரப்பளவு 132 ஹெக்டேர்.

ஹிந்து, சீக்கியர் மற்றும் புத்த மதத்தினருக்கு இது புனித நதியாக கருதப்படுகிறது.

ஏப்ரல், மே, டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப்பயணிகள் இதை ரசிக்கலாம்.

இங்கிருந்து 5 கி.மீ., துாரத்தில் இந்தியா - திபெத் எல்லை அமைந்துள்ளது.