முதுமையில் மலச்சிக்கல்... தவிர்க்க சில யோசனைகள்..
முதுமையில் மலச்சிக்கல் ஏற்பட, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது, சரியான நேரத்திற்கு உணவு எடுக்காதது, காய்கறி, பழங்கள் தவிர்ப்பது, காரணங்களாகும்.
அவர்களுக்கு உள்ள பல் சிக்கலால் மென்று தின்பதில் சிரமம் இருக்கும். காய்கறி, கீரைகள், பழங்களை முற்றிலும் தவிர்த்து ரசம் சாதம், சாம்பார் சாதம் என எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால், நார்ச்சத்து கிடைப்பதில்லை. பல் பிரச்னை இருந்தால், காய்கறி, கீரைகளை வேகவைத்து சாப்பிடலாம்.
பருப்புடன் காய்கறி கூட்டாக செய்து கொள்ளலாம். இல்லை எனில், அரைத்து, சாப்பிடும் தோசை மாவு, சப்பாத்தி மாவுடன் கலந்தும் சாப்பிடலாம்.
தண்ணீர் நாள் ஒன்றுக்கு, 1.5 -2.5 லிட்டர் கட்டாயம் குடிக்க வேண்டும்.
ஒரு சில நோய்களுக்கு அதிக தண்ணீர் எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி நோய் பாதிப்பு இருப்பின், டாக்டர் அறிவுரை பெற்று தண்ணீர் அளவை நிர்ணயிக்கலாம்.
மைதா, அதிக இனிப்புகள், துரித மற்றும் பொறித்த உணவுகள், புரோட்டா, நுாடுல்ஸ், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இரவு உணவை முடிந்த வரை, 7-8 மணிக்குள் இரவு முடித்துவிடவேண்டும்.
எளிமையான உடற்பயிற்சிகள் செய்து, உடல் இயக்கத்தை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.