'ஸ்டாலின் கேட்க மாட்டாரா?'

பதிவு செய்த நாள் : செப் 21, 2023 | கருத்துகள் (1) |
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 'ஸ்டாலின் கேட்க மாட்டாரா?'



தமிழகத்தில், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை, தி.மு.க.,வினர் பெரிய அளவில் பேசியும், விளம்பரப்படுத்தியும் வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டரில், 'இன்று தமிழக மகளிருக்கு 1,000 ரூபாய் தந்த வள்ளலே... நாளை, அனைத்து இந்திய மகளிருக்கும் உரிமைத் தொகை தரப்போகும் புதிய தலைமையே... லீடர் ஆப் இந்தியாவின் வள்ளலே...' என, முதல்வர் ஸ்டாலினை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளியிருந்தனர்.

'இண்டியா' கூட்டணியில் இன்னும் பிரதமர் வேட்பாளரை இறுதி செய்யாத நிலையில், தி.மு.க.,வினர், ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக அறிவித்து ஒட்டிய இந்த போஸ்டரால், கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

பார்வையாளர் ஒருவர், 'ஆசை யாரை விட்டது... ஒருவேளை கூட்டணியில் அதிக எம்.பி.,க்களை ஜெயிச்சிட்டா, பிரதமர் பதவியை ஸ்டாலின் கேட்க மாட்டாரா என்ன...?' என, முணுமுணுக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து (1)

Anantharaman Srinivasan - chennai,இந்தியா
21-செப்-202310:49:42 IST Report Abuse
Anantharaman Srinivasan முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல.. நொண்டிக்குதிரை ரேசில் ஜெயிக்குமா..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X