* நெற்றி திலகமிட்டு கருங்கூந்தல் சீவி மலர் சூட்டி அழகு பார்த்த தாயின் எதிரில், கருங்கூந்தல் கத்தரித்து நாகரிக உடையில் நளினமாய் திரியும்... நங்கைகளிடம் தேடுங்கள்!
* அதிகாலையில் புதுப்புனலாடி நளினமாய் மாக்கோலமிட்டு வீட்டில் குத்து விளக்கேற்றும் நிலைமாறி... அதிகாலையிலிருந்து இரவு வரை அலைபேசியும், கையுமாகத் திரியும் நங்கைகளிடம் தேடுங்கள்!
* வேறு ஆடவர் முகம் பார்க்க நாணி கோணி கால்களால் கோலம் வரையும் நிலைமாறி... நட்பு எனும் பெயரில் ஆடவர்களுடன் ஊர் சுற்றும் நங்கைகளிடம் தேடுங்கள்!
* "இவர் தானடி உன் மணாளன்' என்று கூறிய நிலைமாறி... கல்விச் சாலை செல்லும் போது திருமணம் முடிவதற்குள் விவாகரத்து என்று திரியும் நங்கைகளிடம் தேடுங்கள்!
* ஐயகோ... பாரதியே இதை பார்த்தால் கொதித்தெழுவார்... உனக்கேனடி விடுதலை; உனக்கா நான் வாங்கித் தந்தேன் விடுதலை... என்று பித்தானக மாறி பிதற்றுவான்!
* பெண்ணே... வாங்கித் தந்த விடுதலை தன்னம்பிக்கையை உயர்த்தி வீட்டில் குத்து விளக்கு ஏற்றத்தானே ஒழிய... வீட்டை கொளுத்தும் கொள்ளியாக்க அல்ல!
* வாங்கிய விடுதலையை வீணாக்காதே... மீண்டும் மூலையில் முடங்காதே!
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நாகரிக உடையில் நளினமாய் திரியும் நங்கைகள் என்றும், அதிகாலையிலிருந்து இரவு வரை அலைபேசியும், கையுமாகத் திரியும் நங்கைகள் என்றும், நட்பு எனும் பெயரில் ஆடவர்களுடன் ஊர் சுற்றும் நங்கைகள் என்றும், கல்விச் சாலை செல்லும் போது திருமணம் முடிவதற்குள் விவாகரத்து என்று திரியும் நங்கைகள் என்றும் சொல்வது ஒரு பெண் என்பதால் அதிகமாக எதிர்ப்பு இல்லை, இதையே ஒரு ஆண் சொல்லியிருந்தால் பல இளவயது வாலிபர்கள் கொதித்திருப்பார்கள். உண்மை சுடும்.
திரைப்ப்டத்தில் நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் குறைந்த ஆடைகளையே அணிந்தும், மழையில் நனைந்து அங்கங்கள் தெரியும்படியும் வருவதாகக் காட்டுகிறார்கள். ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் பெண்ணின் வீடு புகுந்து பெற்றோர்களுடன் படுத்து உறங்கும் பெண்ணைத் தூக்கி வருவதாகக் காட்டுகிறார்கள். பின் எப்படி இளைஞர்கள் மனதில் நல்லெண்ணத்தை விளைவிக்க முடிய்ம்?
வ.க.கன்னியப்பன்
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.