விரல்களுக்கு நெட்டை எடுப்பது ஆபத்தானது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2015
00:00

நினைத்ததை நினைத்த நேரத்திலேயே முடிப்பதற்கு, நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கைவிரல்கள். கைகளுக்கு அர்த்தமாக இருப்பதும் விரல்களே. அவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவையாகவும், தனித்தனி செயல்களுக்கு பயன்படுபவையாகவும் உள்ளன. விரல்கள் செய்யும் பணிகள்தான் எத்தனை, எத்தனை!
காலை முதல் மறுநாள் காலை வரை, சுறுசுறுப்பாக இயங்கும் உறுப்புகளின் பட்டியலிலும் விரல்களுக்கு முக்கிய இடம் உண்டு. இவ்வாறு சிறப்பு வாய்ந்த விரல்களுக்கு, சிறு வலியோ அல்லது சோர்வோ ஏற்பட்டால், அதனை பொறுத்துக் கொள்வதற்கு

பலராலும் முடியாது.
விரல்களில் வீக்கம், வலி, காயம் ஏற்படுவதை அலட்சியமாக விட்டு விடக்கூடாது. உடலின் உட்பகுதியில் நிகழும் பாதிப்புகளுக்கும், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கும் அதிக தொடர்பு உள்ளது. விரல்களுக்கு செல்லும் நரம்பு, ரத்தக் குழாய்கள், எலும்புகள் மற்றும் தசை, உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டாலே, விரல் வலி உண்டாகிறது.
பெரும்பாலும் உடல் சோர்வடையும் நேரத்தில்தான், மிகுதியான வலி உண்டாகும். இவ்வலி, உடல் சோர்வு நீங்கிய பின்னரும் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். விரல் வலியை பொறுத்துக்கொள்வதற்கு, விரல்களில் நெட்டை எடுப்பது
ஆபத்தான ஒன்று.
நெட்டை எடுப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் நெட்டை எடுக்கும் சமயத்தில் சுகமாக இருந்தாலும், பின்னர், பக்கவாதம் வரும் அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும்.
விரல் வலி ஏற்படும் போது, சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை வருவது, போன்றவை ஏற்பட்டால், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம். கம்ப்யூட்டர் மற்றும் டைப்ரைட்டிங் பணிபுரிபவர்கள் விரல்களை அதிகமாக பயன்படுத்துவர். அவர்கள் ஓய்வு நேரத்தில் விரல்களுக்கான பயிற்சிகளை செய்து வர வேண்டும். ஏனெனில், விரல்கள் முழுமையாக சோர்வடைந்து, நரம்பு மண்டலத்தை தாக்கும் சமயத்தில்தான் வலியை ஏற்படுத்தும்.
அதனால், முன்னெச்சரிக்கையாக, விரல்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை செய்து கொள்ளலாம். விரல் நகங்களாலும், விரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். காயங்கள் ஏற்படும் சமயத்தில், விரல்களை கூடுதல் கவனத்துடன் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணமாகும், 80 சதவீத கிருமிகள், விரல்கள் மற்றும் நகங்களின் மூலமே உடலுக்குள் செல்கின்றன. ஆகவே, விரல்கள் பத்திரம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் நலம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X