பொதுவாக வாழைப்பழத்தை அதிகமாக உண்பதால், உடம்பை வெளுக்கச் செய்யும். சருமரோகம், பித்தபிணிகள், மலச்சிக்கல் தீரும். ரஸ்தாளி பழம் நாவிற்கு இதமாக இருக்கும். கருவாழைப்பழம் பித்தத்தைப் போக்கும். மொந்தன் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் பித்தம், வறட்சி முதலிய நோய்கள் நீங்கும். வெள்ளை வாழைப்பழம் சுவையுள்ளதாக இருக்கும். கதலி வாழைப்பழம் இனிப்புடன் சற்று புளிப்பு ருசியுடையதாக இருப்பதால், நாவிற்கு தனிச்சுவை அளிக்கிறது. இதனைக் கதலி என்பர். அடுக்கு வாழைப்பழம் தேகக்காந்தியை உண்டாக்கும். பச்சை வாழைப்பழம் தேகத்தின் உஷ்ணத்தையும், பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும். மலை வாழைப்பழம் சோகை ரோகம், மலபந்தம் முதலியவற்றை குணப்படுத்தும் இயல்புடையது. பேயன் வாழைப்பழத்தை உட்கொள்ளுவதால் உட்சூடு நீங்கும். உடலில் குளிர்ச்சி உண்டாகும். மேலும் மலமிளக்கமும் ஏற்படும். வாழைப்பழத்தில் நியாசின் என்ற சத்துப் பொருள் கொஞ்சம் உண்டு. தியாமின், ரிபோப்ளேவின் என்ற சத்துப்பொருள்கள், மிகுதியாகக் காணப்படுகின்றன. ஒரு வாழைப்பழத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, உலோகச் சத்து, சுண்ணாம்பு, இரும்பு, சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், செம்பு, கந்தகம், குளோரின் ஆகிய சத்து பொருள்கள் அடங்கியுள்ளன. வாழைப்பூ, காய், தண்டு முதலியன சமையலுக்கு பயன்படுகின்றன. அவை மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள், வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவது நல்லது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
ஆண்டு முழுக்க கிடைக்கும் எல்லோரும் வாங்கி துன்னும்படி ஈசியா கிடைக்குது, சுகர் இருக்குரவா துன்னவே கூடாதுன்ராங்க்கலெ, தவறு தாராளமா தின்னலாம் தினம் 1பழம் தின்னால் மலச்சிக்கலே வராது , மாதுளை சாத்துக்குடி பப்பாளி ஆப்பில்னு துன்னலாம்னு சொல்றா ஆனால் ஏழைகள் ஆப்பிள் பலம் வாங்கும் நிலைலேஎவா இருக்கா , ஏழ்மையால் அன்று பலம் துன்னமுடிலீங்க இன்று சுகர்நாலே தின்னவே ம்முடிலீங்க ,பலா மாம்பழம் எல்லாம் ரொம்பவே இஷ்டம் , சுகர்னு துன்னவேமுடிலேயே பார்த்தாலே மந்த ஏங்குதே 4அனா க்குவித்தப்போ வாங்க துட்டு இல்லீங்க இன்று துட்டு இருக்கு வாங்க ஆசையும் இருக்கு ஆனால்துன்னமுடிலேயே அதான் கொடுமை
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.