பஞ்சகவ்யா தயாரிக்க நாட்டு பசுமாடு தேவையா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2016
00:00

இயற்கை விவசாய உத்தியான பஞ்சகவ்யா தயாரிப்பது மிக எளிது. அதற்கு பசுமாடு தான் தேவை. அதுவும் நாட்டு மாடு தான் நல்லது என்ற பிரசாரம் செய்து சில நாட்டு மாடு வியாபாரிகள் நல்ல காசு பார்த்து வருவது அறியாமை. ஒவ்வொரு விலங்கும் கழிவினை வெளியிடுவது இயற்கை. இதில் நாட்டு மாடு வேற மாதிரி கோமியம் தரும். வேற மாடு வேஸ்ட் என்று கூட பிரச்னை செய்வது நல்லதல்ல. மாடுகள் உண்ணும் உணவில் எந்த மாறுபாடும் நாம் காட்டாத போது கழிவு எப்படி வேறுபடும். ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் பசுமாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கன்றுக்குட்டிகளாவது வளர்த்து வரலாம். அல்லது ஆடு வளர்க்கலாம். அருகில் உள்ள விவசாயிகளிடம் விலை கொடுத்து கூட பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர் வாங்குவது பெரிய கஷ்டமான வேலையே இல்லை.
வீட்டை விட்டு வெகு தொலைவில் உள்ள கடைக்குப்போய் மருந்து அதிக விலை கொடுத்து வாங்க மனம் உள்ளவருக்கு அருகில் கிடைக்கும் கழிவினை வாங்குவது ஒன்றும் பெரியதாக தென்படாது. மிகவும் எளிய பொருள் தான் பஞ்சகவ்யா. அது தயாரித்திட பச்சை பசுஞ்சாணம் 5 கிலோ, பசுமாட்டு சிறுநீர் 3 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், தயிர் 1 லிட்டர், நெய் - 1லிட்டர், நாட்டு சர்க்கரை 1 கிலோ, இளநீர் 3 லிட்டர், வாழைப்பழங்கள் 12 எண் தேவை. பச்சை பசு சாணி 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1 லிட்டரை கலந்து பிசைந்து ஒரு வாயகன்ற மண்பானையில் 4 அல்லது 5 நாட்கள் வைக்கவும். இதை தினம் இருமுறை அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் நன்கு கலக்கவும்.

ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை நன்கு கலக்கி விடவும். கம்பி வலையில் வாயை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருமுறையோ அல்லது பல முறையோ நன்கு கலக்கி விடவும். இதனால் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு அபரிதமாக நுண்ணுயிர்கள் உற்பத்தி ஆகும் வாய்ப்பும் 15 நாளில் பஞ்சகவ்யா ரெடியாகும் வாய்ப்பும் உள்ளது. இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு கெடாமல் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைத்து கெட்டியான மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வர வேண்டும்.
10 லிட்டர் நீரில் 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து கொண்டு இலைவழி உரம் அல்லது பயிர்க்கு, நேரடியாக ஊற்றுதல் மூலம் பலன்பெறலாம். கைத்தெளிப்பானில் தெளிக்கும்போது வடிகட்டி பயன்படுத்தவும். விசைத் தெளிப்பானின் அடைப்பானையுடன் குழாயின் நுனிப்பகுதியையும் பெரிதாகச் செய்து கொண்டால் அடைப்பின்றி தெளிப்பு சீராக வரும் பஞ்சகவ்யா 75 சதம் உரமாகவும் 25 சதம் பூச்சி மற்றும் நோய்கொல்லி மருந்தாகவும் வேலை செய்து நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் விபரம் பெற 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
- டாக்டர் பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர், உடுமலை, திருப்பூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Gopal Thevaraj - Trichy,இந்தியா
27-ஜன-201619:43:15 IST Report Abuse
Gopal Thevaraj முக்கியமான ஒன்று நோய் எதிர்ப்புமருந்து கொடுதிருந்தால் (Antibiotic) சில நாட்கள் கழித்து அந்த மாடுகளின் கழிவுகளை சேகரிக்க வேண்டும். இல்லை என்றால் நன்மை பயக்கும் நுனுயிரிகள் அளவு வெகு குறைவாகவே இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X