சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2016
00:00

உழவனின் நண்பன் மண்புழு என்பது தெரிந்தது. சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் உழவனின் உற்ற தோழன்கள் தான். மண் புழுக்கள் தென்னை மரங்களின் வேர்ப்பகுதிக்குள் துளை போட்டு, மேலும் கீழும் சென்று வாழும் குணம் கொண்டது. இதனால் பூமியின் கெட்டித்தன்மை குறைகிறது. பூமிக்குள் காற்று புகும். நீரும் செல்லும். அதனால் வேர்கள் சுவாசிக்க காற்றும், தண்ணீரும் தடையின்றி பூமிக்குள் புகுந்து வேர்களுக்கு கிடைக்கிறது.

'கிராம தொட்டில்' காகம்: 'வேர்கள் சுவாசிக்கின்றது' என பள்ளி பரு வத்தில் படித்திருப்போம். இது அனைத்து பயிர் களுக்கும் பொருந்தும். நெல், வாழை, கரும்பு, தென்னை, மா, பலா மற்றும் புல், பூண்டு, பயிர்களும் சுவாசிக்க தேவையான காற்று, பூமிக்குள் செல்ல மண் புழுக்கள் உழுது கொடுத்து உதவுகிறது.
நெல், புல், எள், கொள், கடலை, மக்காச்சோளம் என அனைத்து வேளாண் பயிர்களையும் புழு பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து மகசூல் பெருக செய்வதில் பறவைகளின் பங்களிப்பு மிக முக்கியம். அதில் பெரும் பங்கு வகிப்பது, சிட்டு குருவிகளையே சாரும். இரவில் நெல் வயலில் நடமாடும் எலி பயிர்களுக்கு கெடுதல் செய்யக் கூடிய பூச்சிகளை பிடித்து தின்று, பாதுகாப்பது ஆந்தைகள். அதிகாலை நேரங்களில் செத்து கிடக்கும் எலி, பெருச்சாளி மற்றும் அழுகிய பொருட்களை தூக்கி சென்று தெரு சுத்தம் செய்யும் பணியை காகம் செய்கிறது. அதனால் காகம் 'கிராம தொட்டில்' என்று அழைக்கப் படுகிறது.

சிட்டுவும், தூக்கணாவும்: பகல் முழுவதும் வேகமாக பறந்து... பறந்து... சென்று தாய் அந்து பூச்சிகளை பிடித்து தின்று வாழ்வது சிட்டு குருவிகள். வயல்களில் கூடுகட்டி குடும்பமாக வாழ்ந்து புழு பூச்சிகளை வேட்டையாடும்.
வயல் அறுவடை காலத்திற்கு முன், சிட்டுகுருவிகள் முட்டையிட்டு தன் இனத்தை 90 முதல் 100 நாட்களுக்குள் பெருக்கி கொள்ளும்.
மொத்த சிட்டு குருவிகளும் நெற் பயிர்களில் ஊடுருவி தின்று அழிக்கும் புழுக்களை பிடித்து தின்று ஒட்டு மொத்தமாக அழிக்கும். தாய் அந்து பூச்சிகளை பறந்து பாய்ந்து பிடித்து தின்று பயிர்களை பாதுகாக்கும்.
சிட்டுக்குருவிகள் உரிமையுடனும், நம்பிக்கையுடனும் வீடுகளில் புகுந்து கூடுகட்டி செல்ல பிராணிகளாக வாழ்ந்த காலங்கள் மனதில் மறக்க முடியாதது.
தென்னை, பனை, ஈச்சை மரங்களில் தொங்குகிற கூட்டில் சிட்டு குருவி குடும்பத்தை சேர்ந்த தூக்கனாங்குருவிகள் வாழ்கிறது.
அந்த கூடு பொறியியல் வல்லுனர்களின் அறிவுக்குக்கூட எட்டாத கூடாக அமைந்திருக்கும். மழை, புயல் காற்றை தாங்கி அந்தக்கூடு இரும்பு வீடு போன்று அமைந்திருப்பது ஆச்சரியமாக தோன்றும். மனித வாழ்க்கை வளம் பெறவும் பசி, பட்டினி தீர உணவு தானிய உற்பத்தி பெருகவும், இயற்கை படைத்து கொடுத்த அற்புத பறவையாக சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் இருந்து வருவது இயற்கை அன்னையின் வரப்பிரசாதம். தொடர்புக்கு: 82204 59341
-டாக்டர். வா.செ.செல்வம்
தென்னை ஆராய்ச்சியாளர்,
திருவையாறு.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X