உய்த்தலென்பது யாதெனில்...
நீ யாரையும் பார்த்து
இயங்க வேண்டாம்...
உன் செயல் திறனே
உன்னை செதுக்கட்டும்!
அடுத்தவரின்
அழுத்து விசையில் உழல
நீயொன்றும்,
இயந்திர மனிதனல்ல
மந்திர மனிதன்!
உன்னால் இயலும் என்பதே
உன் இயக்கத்திற்கான விதி!
மர உச்சியில் வீற்றிருக்கும்
பழங்கள் கூட
உன் கண்ணடிபட்டு
விழுவதில்லை
உன் கல்லடிபட்டே
விழுகிறது!
வாழ்க்கை உனக்கு
வசமாவதும்
அதுவே உனக்கு
விஷமாவதும்
உன் கைகளில் தான் இருக்கிறது!
உனக்குப் பிடித்த
அந்த ஒரே விஷயத்தை
திரும்பத் திரும்ப செய்
அதையே
விரும்பி செய்
வெற்றியடைவாய்!
உய்த்தல் என்பது யாதெனில்...
எப்போதும் அது
கண்ணாமூச்சி விளையாடியே
பழக்கப்பட்டது...
அதை உன் சுய
வட்டத்திற்குள் அடக்க
அதிரடி செயலுாக்கம் தேவை!
இவ்வுலகத்தை
கால்பந்து மைதானமாய்
நினைத்துக் கொள்...
உன் அருகே வரும்
'பந்து' என்கிற அந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
அதை வளைக்குள்
திணிக்க போராடு!
அழகான ரோஜாதான்...
ஏனோ, தானோவென்று
பறித்தால்
அதன் முட்கள் உன் விரலை
பதம் பார்த்து விடும்...
எதையும் நுணுக்கமாகவும்,
சற்று தெளிவாகவும் செய்தால்
உன் கழுத்துப் பூமாலையே
உன்னை மலர் துாவி வரவேற்கும்!
மொத்தத்தில் நீ
விழுவதும், விளைவதும்
உன் முயற்சியில் தான்
இருக்கிறது!
அதிரை.இளையசாகுல்,
முத்துப்பேட்டை.