இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2018
00:00

விலங்குகள் இயல்பை மாற்றாதீர்!
சமீபத்தில், பழமுதிர் சோலை முருகன் கோவிலுக்கு போகும் வழியில், அங்கிருந்த குரங்குகளுக்கு, தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். இதைப் பார்த்த வனத்துறை அதிகாரி எங்களை அழைத்து, 'குரங்குகளுக்கு, இப்படி பழங்கள் கொடுத்து பழக்குவது தவறானது...' என்று அறிவுறுத்தினார்.
ஆச்சர்யமாக இருந்தது... 'விலங்குகளுக்கு உணவிடுவது நல்லது தானே...' என்று கேட்டோம்.

அதற்கு அவர், 'சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மனிதர்கள், பிரியத்தில் தான், குரங்குகளுக்கு உணவு கொடுக்கின்றனர். ஆனால், தினமும் இப்படியே, இந்த குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால், கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.
இப்படியே போனால், அவைகள், பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்கு மாறிவிடும் அபாயம் உள்ளது. இப்போதே, வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல, இந்த குரங்குகளும், டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுத்து வருகின்றன. எனவே, இயற்கையுடன் இணைந்து வாழும் விலங்குகளை, அதன் போக்கில் வளர விடுவதே ஆரோக்கியமானது...' என, கூறினார்.
கேட்கும்போதே மனசு, 'திக்'கென்றது; நிறைய யோசிக்கவும் வைத்தது.
இலவச அரிசி வாங்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி, இலவச மின் விசிறியில் இளைப்பாறி, இலவச, 'டிவி'யில் படமும், சீரியல்களும் பார்க்கும் நம்ம ஊர் மக்களுக்கும், இதுதான் நடக்கிறது; உழைக்கவே மனம் வருவதில்லை.
மேட்டர் என்னவோ குரங்குகளைப் பற்றித்தான். ஆனால், அது, நம் மக்களுக்கும் அப்படியே பொருந்துவதை நினைத்தால், மனம், 'பகீர்'ரென்கிறது.
இந்த நிமிடத்திலிருந்து நாம் திருத்திக் கொள்வோமா தோழர்களே!
—சி.பி.செந்தில், சென்னிமலை.

ஓய்வு பெற்றவர்கள் செய்யும் சேவை!
எங்கள் தெருவில், அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்று, பென்ஷன் வாங்கும் மூன்று பெரியவர்கள் இருக்கின்றனர். காலையில், மூவரும் ஒன்றாக கிளம்பி, அருகில் இருக்கும் பூங்காவிற்கு, 'வாக்கிங்' செல்வர். ஒருநாள் காலை, 8:00 மணிக்கு, மூவரையும், அருகிலுள்ள தனியார் பள்ளியருகே பார்த்தேன். மூவரும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, சாலையை கடக்கும் குழந்தைகளுக்கு உதவுவது, பள்ளி வாகனத்திலிருந்து இறங்கும் குழந்தைகளை அழைத்து போய் பள்ளியில் விடுவது போன்ற காரியங்களை செய்தபடி இருந்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, 'காலை, 7:30 மணிக்கே, 'வாக்கிங்'கை முடித்து விடுவோம். பின், நேராக அந்த தனியார் பள்ளிக்கு சென்று, அங்கு, எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். அந்த பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகம் இருக்கிறது. அந்த கழகத்திலிருந்து சிலர், போக்குவரத்தை ஒழுங்கு செய்ய வருகின்றனர். ஆனால், அவர்களால் அனைத்து பணிகளையும் செய்ய முடிவதில்லை. எனவே, எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். மாலை வேளையிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, அந்த தனியார் பள்ளிக்கு சென்று விடுவோம்...' என்றனர்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், பூங்காக்களில் உட்கார்ந்து வெட்டி கதை பேசிக் கொண்டிருப்போர் மத்தியில், உருப்படியான காரியம் செய்யும் அந்த பெரியவர்களை பாராட்டி வந்தேன்.
— ஜெ.கண்ணன், சென்னை.

பெண் குழந்தைகளை காப்போம்; வல்லரசாக மாறுவோம்!
அரசு மருத்துவமனையில், செவிலியர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தேன். கர்ப்பிணி பெண் ஒருவர், 'அட்மிட்' ஆகியிருந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பெண்ணாக பிறந்து விட்டதே என்று, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமலும், சரியாக பராமரிக்காமலும் இருந்தார், அந்த தாய்.
ஒரு கட்டத்தில், தாயின் கட்டிலுக்கு அடியில் பெண் குழந்தை கிடந்தது. அக்குழந்தை உடல் எடை குறைந்து, சோர்வுற்று, உடல் முழுதும் மஞ்சள் நிறம் படர்ந்து, அழுதபடியே இருந்தது. இதைக் கண்ட நாங்கள், எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அந்த தாயும், அவள் குடும்பத்தினரும் கேட்கவில்லை.
மருத்துவர் வந்து மிரட்டிய பின், மேல் சிகிச்சைக்காக அக்குழந்தையை வேறொரு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஒரு பக்கம், பெண்கள் சாதிக்கின்றனர்; மறுபக்கம் பெண்கள் சிதைக்கப்படுகின்றனர். இச்சிதைப்பிற்கு முடிவு தான் என்ன?
இப்போதெல்லாம், 'மகளிர் தினம்' என்பது வெறும் ஒரு வார்த்தையாகவும், ஒரு நாளாகவும் மட்டுமே இருக்கிறது. இந்நிலை மாறினால் தான், நம் நாடு, வல்லரசாக மாறும்.
— வி.கீர்த்திகா, வேலுார்.

கண்ணிருந்தும் குருடரானவர்!
நண்பனின் புது மனை புகு விழா அழைப்பை ஏற்று சென்றிருந்தேன்; கடந்த, 2015ம் ஆண்டு பெய்த மழையில், முதல் மாடி வரையில் வெள்ளம் வந்து மூழ்கிய பகுதிக்கு பக்கத்திலேயே இருந்தது, நண்பன் வாங்கி இருந்த வீடு.
பறவைகள் சரணாலயமான சதுப்பு நிலத்தில், மண்ணைக் கொட்டி தூர்த்து மேடாக்கி, அதை பிளாட்டாக்கி, கட்டடம் கட்டி விற்றிருந்த ஒரு பில்டரிடமிருந்து, வீட்டை வாங்கியிருந்தான். அதுவும் தரை தளத்தில்!
அதிர்ந்து போன நான், 'சொந்த வீடுங்கறது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவு தான்; அதுக்காக இப்படியா... இந்த இடத்தைப் பற்றி நல்லா தெரிஞ்சுருந்தும் ஏண்டா இந்த இடத்துல வீடு வாங்குனே...' என்று ஆதங்கத்துடன், கேட்டேன்.
அதற்கு அவன் கூறிய பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன்... 'நாற்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, பத்து லட்சம் ரூபாய் தள்ளுபடியில் சகாய விலையில் (25 சதவீதம் தள்ளுபடி தரணும்னா, அந்த இடத்தோட தரத்தை கொஞ்சம் யோசிச்சு பார்த்துக்குங்க...) கிடைச்சது; 12 மாசமுமா மழை பெஞ்சிட்டு இருக்கப் போவுது... வருஷத்துல, ஒரு பத்து, பதினைஞ்சு நாள் தானே பெய்யுது... அந்த நேரத்துல, வீட்டை பூட்டிட்டு, வேற எங்காவது போய் தங்கி இருந்துட்டு, மழை வெள்ளம் வடிஞ்ச பின், மீண்டும் வந்து குடியிருந்துக்க வேண்டியது தான்...' என்றான்.
'அது சரி... தண்ணியில வீட்டுல இருக்குற பொருளெல்லாம் நாசமாயிடுமே... அதுக்கு என்ன பண்ணுவே...' என்று கேட்ட போது, அவனிடம் பதில் இல்லை.
கண்ணிருந்தும் குருடர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம்; அன்று, நேரில் கண்டேன்; அந்த மன வருத்தத்தில் விருந்துண்ணக் கூட மனம் வராமல், பரிசுப் பொருளை மட்டும் கொடுத்துவிட்டு, கனத்த மனதுடன் திரும்பினேன்.
— எம்.சோமசுந்தரம், சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
sulochana - chennai,ஆஸ்திரேலியா
27-ஜூன்-201814:04:19 IST Report Abuse
sulochana என்னது பொண்ணுன்னு பெத்த குழந்தைக்கு பால் குடுக்கலையா அட பாவிகளா.. சமீபத்தில் ஒரு டிவி யில் இதுபோல பார்த்த பொழுது நிஜம்மா நடக்காது ன்னுள்ளே நினச்சேன். அவள் பெண்ணே கிடையாது. எனக்கு வரிசையாக ஐந்து பெண்களும் மகனும் நவ ரத்னங்களாக ஜொலிக்கிறார்கள். , இந்த மாதிரி பெண்களுக்கு சரியான வழிகாட்டுதலும் இல்லை வளர்ந்த சூழ்நிலையும் சரி இல்லை. இவளும் தானே காரணம் இவள் சாப்பிடாமல் இருப்பதுதானே. சரியான புத்தி இல்லாதவளாக இருப்பாள் போல் இருக்கிறது
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
27-ஜூன்-201800:12:11 IST Report Abuse
Manian விலங்குகள் இயல்பை மாற்றாதீர்: சொல்லாமல் விட்டது- நம் உண்ணும் உணவு , பழங்கள், காய் கறிகள் போன்றவற்றில் பூச்சி கொல்லி மருந்துகள், உரங்களில் ரசாயனக் கலப்படங்கள் , தண்ணீரில் ஆர்சினிக், யுரேனியம் போன்ற உலோகங்கள் இருக்கிறன. கடல் உப்பும் உள்ளது. அவரை உண்டு குரங்குகள் பலவித நீண்ட நாள் வியாதிகள், மரபணு மாற்றங்கள் பெற்று அந்த இனங்கலே அழிந்துவிடும். மேலும், அவற்றின் மிதிக்க பாக்டிரியாக்கள், வைரசுக்குள் மனிதர்களுக்கு பரவி அதனால் பேராபாத்துக்கள் வரும். ஆப்பிக்காவில் எபோலா என்ற தொத்து வியாதியால் ஆயிரக்கனாக்கான ஆப்பிரிக்கர்கள் இறந்து விட்டார்கள். இந்த மாதிரி வரும் வியாதிகளை குணப்படுத்தும் மருந்துகளும் இல்லை. அமெரிக்காவில் இந்த வியாதிகள் இல்லாததால், அங்கே இதை தடுக்கும் மருந்து முறையை ஆராச்சிகளும் இல்லை. காடுகளை மறுபடியும் அழிக்காமல் அங்கே குரங்குகள் வளரவேண்டும். இரக்கம் என்பது வேறு, புரிதல் வேறு.
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
28-ஜூன்-201807:21:00 IST Report Abuse
Vijayசொல்லிட்டாரு கேட்டுக்கோங்க ... காட்ல சாப்பிட்றதுக்கு எதுவும் இல்லாததுனாலதான் குரங்கு, மற்ற விலங்குகள் மக்கள் வாழும் இடத்துக்கு , உணவு தேடி, தண்ணீர் தேடி வருகிறது .. அத முதல புரிஞ்சிக்கோ ......
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
28-ஜூன்-201807:41:57 IST Report Abuse
Vijayநாம் உண்ணும் உணவை கோழி , ஆடு , மாடுகளுக்கு மட்டும் குடுக்கலாம் , அதுக்குலாம் ஒன்னும் ஆகாது ... அதனால் கோழி , ஆடு , மாடு மட்டும் வீட்டில் கெட்டி போட்டு சோறு போட்டு வளர்ப்போம் .. பன்றி காய்ச்சல் கோழி மூலமாக பரவுதுனு சொல்லுவாங்க , ஆனால் பரவாயில்லை கோழி ஆடு மாடுகளால் எங்களுக்கு பயன் உண்டு ,, ஆனால் குரங்கினாள் ஒரு பயனும் இல்லை அதனால் அதன் இயல்பை மாற்றாதீர்கள் .. காட்டுக்குள்ள சாப்பிட எதுவும் இல்லைனு ஊருக்குள்ள வந்துச்சின்னா தொரத்தி விடுங்க .....
Rate this:
Manian - Chennai,இந்தியா
29-ஜூன்-201801:13:12 IST Report Abuse
Manianஇங்கே யாரும் "ஏன்" குரங்குகள் காட்டை விட்டு வருகின்றன என்று சொல்லவில்லை. அவற்றுக்கு உணவு கொடுக்கும் போது வரும், நாம்மை அறியாமல் செய்யும் உபகாரம் உபத்திரமாக மாறும் என்பதே. நாய்களுக்கு அளவுக்கு அதிகமா சாப்பாடு போட்டு அவை அளவுக்கு மீறி பெருத்து விடுகிறது என்பது, இதுபோல், ஸுவில் பிராணிகளிக்கு உணவு அளிக்காதீர்கள் என்பதெல்லாம் ஏன் சொல்லுகிறார்கள் என்பதே கேள்வி. ஆடு மாடு, கோழிகள் நம்முடன் வீட்டில் வசிக்கின்றன. குழந்தை பருவம் முதல் நாயுடன் வளரும் குழந்தைகளுக்கு இம்ம்யூனிட்டி- immunity வருகிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். காட்டு மாடுகள், முயல்கள், குரங்குகள், மான்களை போன்றவரை தொடும்போது அவர்றிக்கு வியாதிகளை தடுக்கும் எதிர்ப்பு நம்மக்கு இல்லை, அவைகளை மேலும் ஒருவித ஒட்டுண்ணி- டிக் என்பதன் மூலம் வரும் வியாதி அலையே கொள்ளும் என்று ஆறாய்ச்சிக்கள் சொல்லுகின்றன. அதோடு, உணவு கொடுக்கவிடடால் , உணவு கிடைக்காவிடடால் தட்டி பறிப்பது, கடிப்பது எல்லாம் நீ வளர்க்கும் ஆடுகள், மாடுகள் செய்ததாக சொல்லுவாயா? "எது, என்ன " கேள்விக்கு மட்டுமே இங்கே பதில் சொல்லப்பட்டது. தர்க்க வாதம் Logic கற்றுக்கொண்டு உன் புரிதலை சொன்னால் கற்று கொள்வோமே . வீட்டில் வளரும் குரங்குகளுக்கு காட்டு - wild animal -வியாதிகள் வராது. ஆடு மாடுகளுக்கும் அது போலவே....
Rate this:
Cancel
Anushya Ganapathy - Bangalore,இந்தியா
26-ஜூன்-201813:49:52 IST Report Abuse
Anushya Ganapathy இப்போதெல்லாம், 'மகளிர் தினம்' என்பது வெறும் ஒரு வார்த்தையாகவும், ஒரு நாளாகவும் மட்டுமே இருக்கிறது. - நான் ஒவ்வொரு மகளிர் தினத்தின் போதும் நினைப்பதுண்டு. அம்மா தினம், அப்பா தினம் - பிள்ளைகள் கொண்டாடுகிறார்கள். தாத்தா பாட்டி தினம் பேரப்பிள்ளைகள் கொண்டாடுகிறார்கள். ஆசிரியர் தினம் - மாணவர்கள், என இருக்கும் பொது மகளிர் தினம் மகளிர்களால் (மட்டுமே) கொண்டாடப்படுகிறது. திரைப்படத்துறையின் எப்படி அவர்களுக்கு அவர்களே விருது கொடுத்துக்கொள்கிறார்கள் அது போல.
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
28-ஜூன்-201807:14:51 IST Report Abuse
Vijayமகளிர் தினம் மகளிர்கள் கொண்டாடாமல் வேற யாரு கொண்டாடுவார்கள் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X