திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2018
00:00

ஆனந்த போதினி, பிப்., 13, 1928 இதழில் காணப்படும் தலையங்கம்: நாடகத் துறை, அடைந்திருக்கும் சீர்கேட்டை அளவிட முடியாது. சங்கீதத்திலும், நடிப்பிலும் தேர்ச்சியில்லாத சில சிறுவர்களும், மற்றோரும் எங்கும் நாடகக்காரர்களாக, நடிகர்களாக வெளிப்பட்டிருக்கின்றனர்; நாடகாசிரியர் ஆகியிருக்கின்றனர். கல்வி  அறிவு இல்லாத இவர்களால், புண்ணிய சரித்திரங்களெல்லாம் சின்னா பின்னமாகி, ஆபாசமான சரித்திரங்களே அரங்கேறுகின்றன. எதுகை, மோனை, தளை முதலிய இலக்கண அமைதியும், பொருட் பொருத்தமும் இல்லாத பாடல்களே மிகுதியாக பாடப்படுகின்றன. இடத்திற்கு பொருந்தாத வர்ண மெட்டுகளில் அமைக்கப்படுகின்றன.
உயர்ந்த ராஜபார்ட்காரரால், நரிக்குறவர் பாடும் ஒருவகை வர்ண மெட்டு பாட்டுகள் பாடப்படுகின்றன. ஆண்களும் - பெண்களும் எதிர் எதிரே நின்று, காதால் கேட்கத் தகாத காதல் மொழிகளை வெளிப்படையாக பேசி, கண்ணால் பார்க்கத் தகாத விதத்தில் இடுப்பை வளைத்து, இருவருடைய முன் பாகமும் ஒன்று சேரும்படி முன்னே நீட்டியும், பின்னே இழுத்தும் அநாகரிக ஆட்டத்தை ஆடுகின்றனர்.

எம்.ஜி.ஆர்., ஒரு வார இதழில், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், எம்.ஜி.ஆர்., அதில்:
தங்களுக்கு, ஆரம்பத்தில் புகழ் தேடி தந்த படம் எது?
மாயா மச்சீந்திரா.
முயற்சி இல்லாமல் கிடைப்பது எது?
மரணம்.
அதிர்ஷ்டம் உங்களுக்கு இல்லை; உண்மையா?
உண்மை தான்; அதிர்ஷ்டம் 
இருந்திருந்தால், நான் இவ்வளவு உழைக்க வேண்டியதில்லையே!
உங்களிடம் உள்ள நல்ல குணம் என்ன... கெட்ட குணம் என்ன?
தெரியாது.


சுவையான செய்திகள்' நுாலிலிருந்து: பிரமுகர் ஒருவர், வருமான வரி அலுவலகத்துக்கு சென்று, அதிகாரிகளை பார்த்தார். 'எங்களால் ஆக வேண்டிய காரியம் உங்களுக்கு ஏதாவது உண்டா?' என்று கேட்டார், அங்கிருந்த ஒரு அதிகாரி.
'இல்லை... வெகு நாட்களாகவே எனக்கு ஓர் ஆசை; நான் யாருக்காக சம்பாதிக்கிறேனோ, அவர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று. பார்த்து விட்டேன்; வரட்டுமா?' என்று கூறி புறப்பட்டார் பிரமுகர்.


'புதுக்கோட்டை வரலாறு' நுாலிலிருந்து: சிவகங்கை தாலுகா, காளிப்பூர் கிராமத்தில் உள்ள காட்டில் ஒளிந்திருந்த கட்டபொம்மு, அவரது சகோதரர் ஊமைத்துரை, மைத்துனர் இருவர் மற்றும் மூன்று பேர் ஆக, ஏழு பேரையும் புதுக்கோட்டை அரசர் கண்டுபிடித்தார். கேப்டன் ஸ்மித்தின் ஆணைப்படி அவர்கள் மதுரைக்கு பலத்த காவலுடன் அனுப்பப்பட்டனர்.
பின், கட்ட பொம்மு, கயத்தாறு கிராமத்தில் பாளையத்தார் முன்னிலையில் துாக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை பிடித்து கொடுத்ததற்காக, ஆங்கில கம்பெனியார் புதுக்கோட்டை அரசரின் ராஜ விசுவாசத்தை பாராட்டி, கம்பெனி சார்பில், கவர்னர் ஜெனரல் லார்டு கிளைவ் ஒரு கவுரவ பொன்னாடை, ஒரு குதிரை, இரண்டாயிரம் தங்க நாணயங்களை வழங்கினார்.


'அறிய வேண்டிய ஆயிரம் செய்திகள்' நுாலிலிருந்து: இறந்துபோன தன் மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினான் என்பது தெரியும்.
மும்தாஜ், தன், 14வது பிரசவத்தின் போது தான் இறந்து போனாள் என்ற விஷயம் பலருக்கு தெரியாது.
சீக்கியர்கள் மற்றும் யூதர்கள், வேற்று மதத்தினர் யாரும் தங்கள் மதத்திற்கு மாறி வருவதை விரும்புவதில்லை; அனுமதிப்பதும் இல்லை.


நடுத்தெரு நாராயணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-ஜூன்-201808:50:13 IST Report Abuse
Natarajan Ramanathan மனைவி மும்தாஜ்14வது பிரசவத்தில் இறந்தவுடன் அவரது 20 வயது இளைய சகோதரியை கட்டாயத்திருமணம் செய்துகொண்ட கொடூரன் ஷாஜஹான். தாஜ்மஹல் காதல் மனைவி மும்தாஜ்காக கட்டியது என்பதெல்லாம் சுத்த கப்ஸா. பிற்காலத்தில் இட்டுக்கட்டப்பட்ட கதை.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
24-ஜூன்-201803:08:01 IST Report Abuse
Manian 'புதுக்கோட்டை வரலாறு - இது முன்பே தெரிந்திருந்தால் நாங்களும் சேர்ந்தே கண்டபொன்னமாய் பிடித்து கொடுத்திருப்போமே - திருடர்கள் கழக தொண்டர்கள்.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
24-ஜூன்-201803:06:05 IST Report Abuse
Manian சுவையான செய்திகள்' இதை இப்போது சொல்லவேண்டுமானால், "இல்லை, இதோ என் பத்து மாப்பிள்ளைகள். இவர்களைத் தவிர வேறு யாருக்கெல்லாம் உழைத்தேன் என்பதை ஒரே இடத்தில் நேரில் பார்க்கா வந்தேன்."
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X