இளநீரில், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. தினமும் இளநீர் சாப்பிட்டால், அது, நம்மை இளமையாக வைத்திருக்கும்; குறிப்பாக, கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற சத்துக்களும் உடலில் இருந்து வியர்வையாக வெளியேறுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகி விடும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம், உடலில் உள்ள உப்பு, அதிகமாக வெளியேறுவது தான். இளநீரில் இருக்கிற உப்புச்சத்து, நம் உடலின் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி, உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி, சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால், கோடை வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைக்கு நல்ல மருந்தாகிறது.
மரத்திலிருந்து இளநீரை பறித்து, உடனடியாக குடித்து விடுவது தான் நல்லது; இரண்டு மூன்று நாட்கள் கடந்தோ, பிரிஜ்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இளநீரின் மருத்துவ குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், அதை வெட்டிய அரை மணி நேரத்திற்குள் பருக வேண்டும். இதில், எலுமிச்சை சாறு, குளுகோஸ் போன்ற எதையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம்; சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கவே கூடாது; இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம். கோடையில் தினசரி குறைந்தது, 3 முதல், 4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய நீரை குடிப்பதற்கு பதிலாக, சிறிது சிறிதாக குடித்து வரலாம். ஒரே நேரத்தில், அதிகபட்சமாக அரை லிட்டர் வரை குடிக்கலாம். - கோவிந்தராஜன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நுங்கு, பதநீரை, இளநீர் கலவை போல் எதுவுமே சுகம் தராது. பருவப்பனை பதநீரில் (10 வயசு மரத்திலிருந்து இறக்கப்படும் பதனீர் ) சிரித்து புளித்த மாங்காய் தன்னுட்க்கள் அல்லது ஒரு முடி எலுமிச்சை பழச்சரை பிழிந்து மூன்று நான்கு நிமிஷம் பொறுத்திருந்தால், கால்சியம் சிட்ரேட் என்று அடியில் சுன்னாம்பு படிந்து விடும். அந்த பதநீரை வடி கட்டி, அதனுடன் நுங்கு, , இளநீர் சேரத்து அருந்துங்கள். -அமுதம் எந்றரே சொல்லலாம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.