மு.தமிழ்செல்வம், சூரங்குடி, துாத்துக்குடி மாவட்டம்: 'விரிவான பதில் தரவேண்டிய கேள்வி தாங்கி வரும் தபாலை, குப்பைக் கூடைக்குள் போட்டு விடுவீர்கள்...' என்று சொல்கிறானே, என் நண்பன்... பேஷ் பேஷ்... இனிமேலாவது, இருவரும், இப்பகுதியை படிக்க முயலுங்கள்!
* என்.செந்தில், தேனி: நம்மை ஒருவன் எப்போது மதிப்பான்? உங்கள், 'பர்சில்' பணம் இருக்க வேண்டும்; அவனிடம் இல்லாமல் இருக்க வேண்டும்! அப்போது தான், இந்த காலத்தில் மதிக்கின்றனர்!
ஆர்.கோகிலா, கொரட்டூர், சென்னை: பெண்களான எங்களுக்கு, ஆண்களை போல, மீசை, தாடி ஏன் வளர்வதில்லை? ஹி... ஹி... அதற்கு பதிலாக, உங்களுக்கு தலையில் வளர்கிறதே
ஜி.குமரன், தேனி: புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவன் நான்; வேலை முடித்து வந்து, இரவில் தான் படிப்பேன்; எத்தனை மணி வரை படிக்கலாம்? துாக்கக் கொட்டாவி வரும் வரை... அது வராவிட்டால், கோழி கூவும் வரை... இல்லாவிட்டால், வேலைக்குச் செல்ல முடியாதே!
எம்.ஆர்.ராமலிங்கம், மிளகனுார், சிவகங்கை மாவட்டம்: உ.பா., அருந்தும்போதும், முடித்த பிறகும், சிலர் அமைதியாக இருக்கின்றனர்; மற்றோர், சிரிப்பும், விளையாட்டுமாக இருக்கின்றனர். சிலர், குழப்பமாக காணப்படுகின்றனரே... ஏன்? முதலாமவர், தம் பையிலிருந்து பணத்தை கொடுத்தவர். இரண்டாமவர், நண்பர் எவரோ வாங்கிக் கொடுத்ததை ரசிப்பவர்! மூன்றாமவர், நாளை, 'விருந்து'க்கு காசு இல்லையே என, நினைப்பவர்!
பி.ஜெனிபர், எருக்கூர், நாகை மாவட்டம்: அரசியல்வாதிக்கும், நடிகனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒன்றுமே கிடையாது! இருவருமே வேஷம் போடுகின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பே, 'கலெக் ஷன்' தான்!
* என்.கதிர்வேல், கோவை: யார், யார் இப்போது, சந்தோஷமாக வாழ்கின்றனர்? வேளா வேளைக்கு நேரம் தவறாமல் சாப்பாடு, வெளியே கிடைக்கும் அனைத்து வசதிகளும், 'உள்ளே'யே கிடைத்து விடுவதால், சிறை கைதிகள் தான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்!
* எம்.ஸ்ரீனிவாசன், கவரைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்: நடிகர்களில் எத்தனை வகை உண்டு? எனக்குத் தெரிந்து, மூன்று வகையினர் உள்ளனர்! முதலாவது, சினிமா நடிகர்; இரண்டாவது, அரசியல்வாதி! முதலாமவர், பணத்தை வாங்கிய பின் நடிக்கிறார்; இரண்டாமவர், பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இவ்வேலையைச் செய்கிறார்! மூன்றாவதாக, குடும்ப நடிப்புகள் பற்றி, பின்னர் சொல்கிறேன்!
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
.தமிழ்செல்வம் : விரிவான பதில் என்பது பல விதமாக வரும். எல்லோருக்கும் அது புரியாது. ஆகவே பதிலை பல வழிகளில் எழுத வேண்டி வரும். பள்ளிக்கூட புஸ்தகங்கள் எழுதுபவர்கள் தங்களுக்கு புரிந்த மாதிரி எழுதுகிரார்கள். படிப்பவர்களளுக்கு புரியும் படி எழுத வேண்டும் என்ற்றால் , அதை பல விதங்களில் எழுத வேண்டி வரும். ஆகவே, அதை எந்த பதிப்பாளரும் வெளியிட முடியாது. அதனாலேயே பல பள்ளிக்கூட புஸ்தங்களை படித்து புரிந்து கொள்ள முடிவதில்லை. வள்ளுவரின் குறளுக்கு எத்தனை விளக்கங்கள் சுரங்க சொல்லி விளங்க வைக்க வேண்டும், பத்திரகையின் அளவு கூடக் கூடாது, வாசகர்களை நோகடிக்க
கூடாது, உண்மையை ஏற்றுக்கொள்ளும் வசகர்கள் என்று பல காரங்கள் இருப்பதால், பொதுவாக நீண்ட பதில் தேவையான கேள்விகளை ஒதுக்குவதே நல்லது என்று எழுத்தாளர் நண்பர் ஏகாம்பரம் சொலிக்கிறார். அருமை நண்பர் அந்துமணி அவர்கள் பேஷ் பேஷ் என்று நாசுக்காக சொல்லி விடடார்.
நடிக-நடிகைகள் பாடுபட்டு நடித்து, வெகு காலம் காத்திருந்து பிறகுதான் கலெக்ஷன் பார்க்கிறார்கள். அரசியல்வியாதிகள், நம் பணத்தைக் கொண்டு, நம்மிடமே நாடகமாடி நடிக்கிறார்கள். இருவரும் ஒன்றில்லைல்
எம்.ஸ்ரீனிவாசன்: நாம் எல்லோருமே இயற்கை நடிகர்கள்தான். தாத்தா- பாட்டியுடன் உரிமையோடு பேசுவது போல் ஆசிர்யர்களிடம் பேச முடியுமா? நாமெல்லோரும் நடிகளரின் அவதாரங்களே . உங்களை யாராவது கிச்சுகிச்சு காட்டும்போது சிரிப்பது மட்டுமே உங்களை தனிமைப்படுத்தும் என்றும் அப்போது மட்டுமே மூளையின் இடது பக்க பின்னால் ஓளிரும் என்றும் ஆராச்சிகள் கண்டுள்ளன. நடிகர்கள் காசுக்கா நடிக்கிறார்கள். அவர்கள் அவதாரங்கள் இல்லை, அபராதங்கள். அரசியல் வாதிகள், அரசாங்க வியாதிகளும் போலி நடிகர்களே. கொடுக்கு லஞ்சத்திற்கேப்ப நடிப்பார்கள்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.