உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், எளிதில் இருமல் மற்றும் ஜலதோஷம் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். எனவே, நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற, அன்றாட உணவில், காளான்களை சேர்க்க வேண்டும். இதை சாப்பிடுவதால், நான்கு வாரத்தில் உங்கள் உடல், நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதை உணரலாம். பொதுவாக, காளான்கள் என்று சொன்னவுடன், அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விடுவர். ஏனெனில், காளான்களில் பல வகைகள் உள்ளன. ஆனால், மூன்று வகை காளான் மட்டும், உடலுக்கு அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியவை. அவை: 'ரிஷி, மேட்டக் மற்றும் ஷிட்டேக்' போன்றவை. ரிஷி காளான்: சிவப்பு மற்றும் சற்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பார்ப்பதற்கு காளான் போலவே இருக்காது. இதன் மேல் பகுதி மடல் போலவும், தண்டுப் பகுதி தடித்தும் இருக்கும். சீன மொழியில், 'லிங் ஸி' என்று அழைக்கப்படும் இது, இரண்டு நுாற்றாண்டுகளுக்கு மேலாக, சீன மருத்துவத்தின் முக்கிய மூலிகை காளானாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டக் காளான்: சிறிய ஓக் மரத்தைப் போன்ற தோற்றம் மற்றும் அடர்த்தியான பழுப்பு நிற மடல்களைக் கொண்டது. இந்தக் காளான், புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய்க்கு செய்யப்படும் ரசாயன சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை குணப்படுத்தும். இது, 'எய்ட்ஸ்' நோயைக் குணப்படுத்தும் என, சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. மேலும், சர்க்கரை நோய், தீராத உடல் சோர்வு, முற்றிய காய்ச்சல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கும், இந்த காளான் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. ஷிட்டேக் காளான்: மிகவும் சுவையான இந்த காளான், உலகம் முழுவதும் பிரபலமானது. அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலை கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு நாளும், இதை தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும், என்பதை கண்டறிந்தனர். இந்த மூன்று வகைக் காளான்களும், கடைகளில் கிடைக்கும். சமைத்து, அன்றாட உணவில் சேர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியுடன், ஆரோக்கியமாக வாழுங்கள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேட்டருக்கு தொடர்பே இல்லாத பட்டன் வகை காளான் படத்தை ஏன் போட வேண்டும். கொஞ்சம் தேடி சரியான காளான் படங்களை போட்டுஇருந்தால் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.