மாணவ, மாணவியர் பலரும், வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவைச் சாப்பிடுவதே இல்லை என்பது அனேக பெற்றோர்களின் புகாராக இருக்கிறது. இதுபற்றி மாணவர்களின் கருத்துகளை அறிய உங்களுக்கு வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவு பிடிக்கிறதா? இல்லையா? என்று கேட்டிருந்தோம். மேட்டுப்பாளையம், சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ.மேல்நிலைப் பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ:…
ந. நிக்கிதா (9ஆம் வகுப்பு) வீட்டு உணவை விட, ஓட்டல் சாப்பாடு வெரைட்டியாகவும் நல்ல வாசனையாகவும் இருக்கிறது. ஆனால் வீட்டில் அம்மா கஷ்டப்பட்டு சமைத்துத் தருவதால், அதையே அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறேன்.
ரா. லத்திகா (9ஆம் வகுப்பு) வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவு சூடாக இல்லை. உணவைச் சமைத்த சிறிது நேரத்தில் சூடாகச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி. இதனால், எனக்கு கடைகளில் சூடாகச் சாப்பிடும் உணவே பிடித்திருக்கிறது.
ச. பவதாரிணி (9ஆம் வகுப்பு) நான் விரும்பி உண்பது கடை உணவைத்தான். அங்கு வாங்கும் உணவு ருசியாக இருக்கும். சாப்பாடு, சூடாகவும் ருசியாகவும் இருந்தால் தானே எல்லோருக்கும் பிடிக்கும்? அதனால் எனக்கு வெளி உணவுதான் பிடித்திருக்கிறது.
எஸ்.கே. சுஷ்மிதா (9ஆம் வகுப்பு) வீட்டு உணவுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்றால், வீட்டு உணவுதான் சிறந்தது. அது எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் எப்போதும் ஆரோக்கியமாக வாழ வீட்டு உணவுதான் சிறந்தது.
பி. ஸ்வேதா (9ஆம் வகுப்பு) எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, அதையே செய்து கொடுப்பதால் வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவே எனக்குப் பிடித்திருக்கிறது. வெளியில் சாப்பிட்டால் வயறு மட்டும்தான் நிரம்பும்; மனசு நிறையாது.
சி.க. தனிஷ்கா (8ஆம் வகுப்பு) வீட்டில் கட்டிக் கொடுக்கும் உணவுதான் பிடிக்கும். அதைச் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏதும் வராது. சுத்தமான எண்ணெய், பார்த்து பார்த்து வாங்கிய பொருட்களில் கவனம் எடுத்து, தினமும் சமைத்துத் தரும் அம்மாவின் உணவுதான் எனக்குப் பிடிக்கும்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
உணவை சுடு படுத்த மைரோவ் வேவ் அவனை (Microwave Oven ) பயன் படுத்தலாம். வெளி நாடுகளில் ஆபிசுகளில், பள்ளி கூடங்களில் l இது வைக்கப்பட்டிருக்கும். அங்கே சென்று நமது உணவை சுடாக்கி கொள்ளலாம். வீட்டு உணவால் உடலுக்கு தீமை வராது. ஹோட்டல்களில் பல தரம் சுட்டு வடித்த எண்ணையில் செயயும் பதார்த்தங்கள் கேன்சரை தரும். பள்ளிகளில் மாணவர்களுக்கு சிந்தனை அறிவை யாருமே தறுவதில்லையா?
தற்போது இன்சுலேடட் (சூடுதாங்கி ) பாத்திரங்கள் வந்து விட்டன. அதில் கொண்டுபோனால் சுமார் 4 -6 நேரம் சூடாக இருக்கும். அவை வாய் அகன்ற தெர்மாஸ் பிளாஸ்க் போன்றவை....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.