வளம் பெருக்கும் மண் புழுக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2019
00:00

மண் வளம் பெருக மண் புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. மண் புழுக்கள் கிடைக்க பயிர்கழிவுகளை உட்கொண்டு நன்மை செய்கின்றன. பயிர் வளர ஊக்கியாக செயல்படும். மண் புழுக்களின் உடலின் வெளிப்புறம் ஈரமாக வைத்திருக்க, அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளியிடுகின்றன.

இத்திரவத்தை சேகரித்து பயன்படுத்தும் உத்திதான் 'மண் புழுக்குளியல் நீர் தயாரித்தல்' ஆகும். இதை ஆங்கிலத்தில் 'வெர்மி வாஷ்' என்பர். மண்புழுவை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து, அதன் அடிப்பாகத்தில் மூன்று அல்லது நான்கு இடங்களில் சிறிய துளைகள் இட்டு அதில் இருந்து நீர் வடியும் வகையில் அமைக்க வேண்டும்.

மண் புழு உள்ள பானைக்கு மேல்புறம் நீர் நிரம்பிய கலயம் அமைத்து, அதில் ஒரு லிட்டர் நீரை ஊற்ற வேண்டும். அதற்கு முக்காலி போல மூன்று கம்புகளை கட்டி தொங்க வைத்து சிறு துளை ஏற்படுத்தி சொட்டு சொட்டாக நீர் வர விட வேண்டும். ஒரு இரவு முழுவதும் இவ்வாறு, சொட்டு சொட்டாக விழும் நீர், மண்புழுவின் உடலையும், மண் புழு ஏற்படுத்திய சுரங்கங்களையும் கழுவிய பின், பானையின் கீழ் பகுதி துளைகள் வழியே வெளியேறும்.

இவ்வாறு வெளியேறும் நீரே மண்புழுக் குளியல் நீர் எனப்படுகிறது. தேயிலை தண்ணீர் போல் உள்ள நீரை, பானையின் கீழ் வேறு பாத்திரத்தை வைத்து சேகரித்து பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் குளியல் நீரை, 9 லிட்டர் நீரில் கலந்து பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும். மண்புழுக் குளியல் நீரை தயாரிக்க முடியாதவர்கள் தனியாரிடம் வாங்கி பயன்பெறலாம். காய்கறி மீது மாதம் தோறும் தெளிப்பது அவசியம்.

தொடர்புக்கு 98420 07125.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
04-ஏப்-201920:16:09 IST Report Abuse
 nicolethomson எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க? முதலில் தண்ணீரை செமியுங்க சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X