முருகப் பெருமான், மயிலில் அமர்ந்துள்ளதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அவரது துணைவியரான, வள்ளியும், தெய்வானையும், மயிலில் அமர்ந்துள்ள அதிசயத்தை காண, சிவகங்கை மாவட்டம், இரணியூர், ஆட்கொண்டநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நரசிம்ம அவதாரம் எடுத்து, அசுரனான, இரணியனை சம்ஹாரம் செய்தார், திருமால். இதனால், அவருக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க, சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்து, தோஷம் நீக்கினார், சிவன். அத்துடன், திருமாலின் வேண்டுதலை ஏற்று, இத்தலத்தில், ஆட்கொண்டநாதர் என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால், இவருக்கு, நரசிம்மேஸ்வரர் என்றும் பெயருண்டு. இரணியனை கொன்ற பாவத்துக்கு, விமோசனம் தந்த ஊர் என்பதால், இரணியூர் என்றும் பெயர் ஏற்பட்டது. கோவில்களில் உள்ள கோபுரமும், விமானமும், சுவாமியின் அம்சமாக உள்ளன. நடை அடைத்து விட்டால், விமானத்தை, சுவாமியாக கருதி வழிபடுவர். இக்கோவிலில், சுவாமியையும், விமானத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும் விதமாக அமைத்துள்ளது விசேஷம். முன்மண்டபத்தில் இருந்து இந்த கோணத்தில், சுவாமியை தரிசிக்கலாம். இங்கு, 60 மற்றும் 80ம் திருமணம் நடத்துகின்றனர். அம்பாள் சிவபுரந்தேவி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர், சிவனை வழிபட்டபோது, உடனிருந்த அம்பிகை, அண்ணனின் தோற்றத்தை கண்டு, தானும் உக்கிரம் அடைந்தாள். இவள் உக்கிரமானபோது, உருவான சக்திகள், இவளது சன்னிதி எதிரிலுள்ள மண்டப துாண்களில் நவ சக்திகளாக காட்சி தருகின்றன. அம்பாள் சன்னிதி அருகில், பைரவர் சன்னிதி இருக்கிறது. இவர், இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு, கார்த்திகை மாதத்தில், சம்பகசூர சஷ்டி நடக்கிறது. பிரகாரத்தில், முருகன், மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும், மயில் வாகனங்களில் தனித்தனியாக அமர்ந்திருப்பது, மிக விசேஷமான காட்சி. இங்குள்ள, வித்தக விநாயகரிடம், மாணவர்கள், கல்வி சிறக்க வேண்டிக் கொள்கின்றனர். மேலும், தட்சிணாமூர்த்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார். குபேரனும், வாயு பகவானும், குதிரையில் அமர்ந்துள்ளனர். நவக்கிரக, கஜலட்சுமி சன்னிதிகளும் உள்ளன. மதுரை - தஞ்சாவூர் சாலையில், திருப்புத்துார், 60 கி.மீ., இங்கிருந்து, கீழச்சீவல்பட்டி வழியாக, 16 கி.மீ., சென்றால், இரணியூரை அடையலாம்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
முருகன், விஷ்ணு(கண்ணன்) இருவருக்குமே இரண்டே மனைவிகள் என்கிறார்கள். கல்வி வளராத காலத்தில், முனிவர்கள் மட்டுமே புரிந்து கொண்ட அறிவை பாமரருக்கு கதை வடிவில்(தற்போதைய நடை முறை எழுத்து 1900 அப்புறமே தமிழுக்கு வந்தது) சுருக்கமாக நினைவில் வைக்க "சித்தி- யோக மூலம் தவத்தினால் சித்திக்கும் உள்ளுணர்வு, புத்தி - வெளி உலக கல்வி அறிவு என்று இரெண்டு மனைவிகளாக வருணித்தார்கள். பரமனுக்கு ஒரே மனைவி உடலில் இடப்பாகம் உள்ளாள். "நாரி இடப்பாகருக்கு நஞ்சளித்த பாவி என்று வாலியிடம் புகுபா வகையே- ஒரு பெண்ணை இடது மார்பில் வைத்திருக்கிறார் என்ற பச்சாதாபம் கூட இல்லாமல் ஏ கடேலே ஆலகால விஷத்தை சிவனுக்கு கொடுத்தாய், ஆகவே வைகை கடலில் கலககாது என்று என்ற பாடலில் வரும். மேலும் அவரே அறிவுக்கண் (மூன்றாம் கண் - முக்கண்ணன் - தேங்காயில் முளைக்கும் கண் போல் , புருவ மத்தியில் யோகாவில் காட்டப்படும் உள்ளுணர்வு ) . ஆகவே உருவாக்க படுத்தவே இந்த இரண்டு கடவுளுக்கு மட்டுமே இரெண்டு மனைவிக்கு என்கிறார்கள். இதை புரிந்து கொள்ளாத அறிவுஜீவி போர்வையார்கள் இதை புராண புளுகு என்கிறார்கள். அவர்களின் புரிதலை, இன்று ஓடடை விற்கும் மக்களிடமே ஈவேராவால் "காட்டு மிராண்டிகள் " என்று காசே கொடுக்குமாம் பாடம் பெற்றவர்களிடம் காண்கிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.