* அதிக செலவில்லாமல் வீட்டு தோட்டம் போட விரும்புவோர், செம்பருத்தி, நந்தியாவட்டை, குரோட்டன்ஸ் செடிகளின் குச்சிகளை நட்டு வைத்தால், சில மாதங்களில் வளர்ந்து, பூ பூக்க ஆரம்பித்து விடும்.
* செடி வளர்க்க, சட்டிகள், பூந்தொட்டிகளில் மணல், செம்மண், உரக் கலவையை நிரப்பும் முன், அடி பாகத்தில் சரளை கற்களை போட்டு, நீர் வடிய வசதி செய்வது அவசியம்; இல்லாவிடில், செடிகள் அழுகி விடும்.
* செடி வளர்க்க, மண் சட்டிகளையே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய பிளாஸ்டிக் பக்கெட், 'டப்' மற்றும் 'டப்பா'க்கள் போன்றவற்றிலும் கூட வளர்க்கலாம்; நீர் வடிந்து வெளியேற, ஓரிரு ஓட்டைகள் போட்டுக் கொள்ளலாம்.