தமிழகம்
எம்.ஜி.ஆர்., கவுரவம் - ஏப்., 6: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர். இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ரயில் நிலையம் 1873ல் தொடங்கப்பட்டது. 1931ல் மின்மயமாக்கம் செய்யப்பட்டது. 17 பிளாட்பார்ம்கள் உள்ளன.
ஏப்.,8: சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை.
ஏப்.,16: வாக்காளர்களுக்கு பணம் புகாரில் வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் ரத்து.
ஏப்.,19: அ.ம.மு.க., பொதுச்செயலராக தினகரன் நியமனம்.
ஏப்.,21: திருச்சி முத்தையாம் பாளையம் கருப்பசாமி கோயில் திருவிழா நெரிசலில் ஏழு பேர் பலி.
ஏப்.,24: 'டிக்டாக்' நிறுவனத்தின் உறுதிமொழியை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடையை நீக்கியது.
ஏப்.,26 : அப்பல்லோ மருத்துவமனை வழக்கில், ஜெ., மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.
ஏப்.,30: புதுச்சேரி கவர்னருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
இந்தியா
ஏப்.,5: இந்திய தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவராக விக்ரம் கிர்லோஸ்கர் நியமனம்.
ஏப்.,6: பா.ஜ., அதிருப்தி எம்.பி., சத்ருகன் சின்ஹா காங்கிரசில் சேர்ந்தார்.
*மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி.,க்கு முதலிடம்.
ஏப்.,9: சத்தீஸ்கரின் தண்டே வாடாவில் நக்சலைட்கள் தாக்குதலில் பா.ஜ., எம்.எல்.ஏ., பிமா மந்தவி பலி.
ஏப்.,18: உலக பத்திரிகையாளர் சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 140வது இடம்.
ஏப்.,20: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., இம்பால்' போர்க்கப்பல், இந்திய கப்பல்படையில் சேர்ப்பு.
அரசியல் அவதாரம் - ஏப்., 23: பாலிவுட் நடிகர் சன்னி தியோல், பா.ஜ., வில் சேர்ந்தார். பஞ்சாபின் குருதாஸ்பூர் தொகுதியில் வென்று எம்.பி., ஆனார். நடிகர் தர்மேந்திரவாவின் மகன். இரு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ஏப்.,25: வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் பெண்களை சேர்ப்பதற்கு அறிவிப்பு வெளியீடு.
ஏப்.,26: புதிய 20 ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
உலகம்
அதிவேக '5ஜி' ஏப்., 3 : உலகில் முதன் முறையாக தென்கொரியா முழுவதும் 5ஜி இன்டர்நெட் சேவை துவக்கம்.
ஏப்.,9: உலக வங்கி தலைவராக அமெரிக்காவின் டேவிட் ராபர்ட் மல்பாஸ் பொறுப்பேற்பு.
ஏப்.,10: இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்பு.
ஏப்.,11: சூடானில் 30 ஆண்டுகாலம் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர், நீக்கப்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
அஞ்சாத அசாஞ்சே - ஏப்., 11: ஆஸி.,யின் ஜூலியன் அசாஞ்சே 'விக்கிலீக்ஸ்' இணையதளம் மூலம் பல நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டார். பாலியல் வழக்கில் சிக்கிய இவர், பிரிட்டனில் ஈக்குடார் துாதரகத்தில் தஞ்சம். 7 ஆண்டுக்குப்பின் கைது.
ஏப்.,13: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 2வது ஆண்டாக பின்லாந்து முதலிடம். இந்தியாவுக்கு 140வது இடம்.
ஏப்.,14: அமெரிக்காவின் ஸ்டார்டடோலான்ச் நிறுவனத்தின் உலகின் பெரிய விமானம், முதல் பயணத்தை நிறைவு செய்தது.
ஏப்.,15: பாலஸ்தீன அதிபராக முகமது இஸ்தயி பதவியேற்பு.
இலங்கையில் பயங்கரம் - ஏப்., 21: இலங்கையில் மூன்று சர்ச் உட்பட எட்டு இடங்களில், ஒன்பது தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் பலி. ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்பு.
சீனா சாதனை - ஏப்., 15: உலகில் முதன்முதலாக நிலம், நீரில் சென்று தாக்கும் சீனாவின் 'மரைன் லிசார்ட்' படகு வெற்றிகரமாக சோதனை. நீளம் 40 அடி. மணிக்கு நீரில் 92, நிலத்தில் 20 கி.மீ., வேகத்தில் செல்லும். தானாகவே இயங்கும்.
ஏப்.,23: உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி.
ஏப்.,23: முதல்முறையாக மலேரியாவுக்கான 'ஆர்.டி.எஸ்., எஸ்' என்ற தடுப்பூசி ஆப்பிரிக்க நாடான மலாவியில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடப்பட்டது.
ஏப்.,24: கடவுள் ராமர் சிறப்பு தபால் தலையை இந்தோனேசியா வெளியிட்டது.
ஏப்.,25: முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு.
ஏப்.,27: சீனாவில் உள்ள உலகின் பெரிய புத்தர் சிலையை ஆறு மாதங்களுக்குப்பின் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி.
*இந்தோனேசியாவில் நடந்த ஒரே கட்ட தேர்தல் பணிச்சுமையால், 270 ஊழியர்கள் பலி.
ஏப்.,28: துபாயில் இந்து தந்தை -முஸ்லிம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
*ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் பொறுப்பேற்பு.
ஏப்.,29: அமெரிக்காவில் 25 ஆண்டுகளில் இல்லாத வகையில், அம்மை நோயால் 700 பேர் பாதிப்பு.
ஏப்.,30: ஐந்தாண்டுகளுக்குப்பின் ஐ.எஸ்., பயங்கரவாத தலைவர் அல் பாக்தாதி பேசும் வீடியோ வெளியீடு.