கிழக்காசிய நாடான, தென் கொரியாவின் சியோல் நகரில், முக்கிய வீதியில், ஷூ பாலீஷ் செய்யும் கடை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர், தினமும், தன் கடையை திறப்பதற்கு முன், அருகில் உள்ள மரத்துக்கு செல்கிறார். பின், மரத்தை இரு கைகளாலும் பிடித்தபடி, ஆத்திரம் தீர, தன் தலையை, மீண்டும் மீண்டும் மரத்தில் மோதுகிறார். வலியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், மீண்டும் மோதுகிறார். நெற்றியில் சிறிதாக ரத்தம் கசிந்த பின் தான், அவருக்கு நிம்மதி ஏற்படுகிறது. பின், கடைக்குச் சென்று, வியாபாரத்தில் மூழ்கி விடுகிறார்.
'ஏன் இந்த விபரீதம்...' என, அவரிடம் கேட்டால், 'எனக்கு குத்துச் சண்டை மிகவும் பிடிக்கும். மிகப் பெரிய குத்துச் சண்டை வீரனாக வேண்டும் என, சிறு வயதில் ஆசைப்பட்டேன்; குடும்ப ஏழ்மை காரணமாக, என் ஆசை நிறைவேறவில்லை. ஆனாலும், எனக்குள் அந்த வெறி அடங்க மறுக்கிறது. 'தினமும், தலையை மரத்தில் மோதி, என் வெறியையும், ஆத்திரத்தையும் தீர்த்துக் கொள்கிறேன். கடவுள் ஆசிர்வாதத்தில், என் தலைக்கு, இதுவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை...' எனக் கூறி, மிரள வைக்கிறார், அந்த இளைஞர். ஜோல்னாபையன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
// கடவுள் ஆசிர்வாதத்தில், என் தலைக்கு, இதுவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை//பிரச்சசினை இருப்பதால் தான் இப்படி முட்டிக் கொள்கிறான் என்று அவனுக்கு எப்படி புரிய வைப்பது ?
இந்த உலகில் நினைத்தது நடக்கும் என்று எவரும் இல்லை. இருப்பதை வைத்து சிறப்பாக செய்து முன்னேற்றம் அடைந்தவர்கள் எத்தனையோ பேர். அப்படி இருக்கையில் இவர் தலையில் முட்டி மோதி ஒன்றும் ஆவதில்லை. மனதின் ஆழத்தில் அவர் தம் எண்ணம் சரியாக பதியவில்லை. அப்படி இருந்தால் அது நடந்திருக்கலாம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.