* எஸ். ஜெய்கணேஷ், திண்டுக்கல்:'கொரோனா'வுக்கு மருந்து கண்டுபிடிப்பது சாத்தியமா? நம் முன்னோர் கண்டுபிடித்த, ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறதே! கஷாயம், மாத்திரைகள் மூலம் ஆறே நாளில் விரட்டி அடித்து விடுகின்றனராம்! சில பணக்காரர்கள் மட்டும், 'மொத்தமே, 1,500 - 1,600 ரூபாய் தான் வாங்குகிறீர்கள்... உங்கள் மருத்துவத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை...' என, 'டிஸ்சார்ஜ்' ஆகி சென்று விடுகின்றனராம்!
நவநீலராய், சென்னை: டிபன் சாப்பிட்ட பின், காபி சாப்பிடுவது - காபி சாப்பிட்ட பின், டிபன் சாப்பிடுவது... எது சுவையானது? என் அனுபவத்தில் இரண்டுமே சுவையானது அல்ல... தோசை, 'ஆர்டர்' செய்யும்போதே, காபியும் எடுத்து வரச்சொல்ல வேண்டும். தோசை ஒரு வாய் போட்டு, காபி ஒரு மடக்கு சாப்பிடுவது, சுவையாக இருக்கும்!
* வே. உமா, விழுப்புரம்: பத்தாம் வகுப்பிற்கு, 'ஆல் பாஸ்' போட்டதை எப்படி பார்க்கிறீர்கள்? வேறு வழி என்ன சொல்லுங்கள், இப்போதைய நிலவரத்தில்; அரசின் முடிவு சரி தான் என, நினைக்கிறேன்!
மனோகர், கோவை: 'கொரோனா ஒழியும் நாள், கடவுளுக்குத் தான் தெரியும்' என்று, முதல்வர் இ.பி.எஸ்., கூறுகிறாரே... அதன் அர்த்தம் என்ன? கடவுள் எதிர்ப்பு இயக்கமான, தி.க., வீரமணியின், 'சைடு' அவர் இல்லை என்பதை, மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்!
கே.ஆர். ரவீந்திரன், சென்னை: கட்சிக்கு உழைத்தவர்கள் பலர் இருந்தும், சில தலைவர்கள், வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தருவது ஏன்? 'சம்பாதித்த' பணம், அவர்கள் குடும்பத்துடனேயே இருக்க வேண்டும் என்பதால் தான்!
ஜோ. ஜெயக்குமார், சிவகங்கை: ஜாதக பொருத்தம் பார்க்காமல் அல்லது பொருத்தம் இல்லாமல் இருந்தால், திருமணம் பண்ணலாமா? எனக்கு தெரிந்த முதியவர் ஒருவர், தன், 90வது வயதில், சமீபத்தில் இறந்தார்; பிராமணர். மனைவியின் ஜாதகத்தை வாங்கி, தன் ஜாதகத்தை அதற்கு ஏற்றார் போல் மாற்றி, திருமணம் செய்து கொண்டார். ஐந்து மகன்கள், இரண்டு பெண்களை பெற்றெடுத்தார், அவர் மனைவி. இவர்கள் அனைவருக்கும், அதே பாணியை பின்பற்றினார். எள்ளு பேரனை பார்த்த பின்பே இறந்தார். ஜாதகம் தேவையா..
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
கே.ஆர். ரவீந்திரன், சென்னை: இல்லாவிட்டால் எதுவும் சம்பாதிக்க திறமை இல்லாமல், மது-மாது-கார்-நகைகள் வாங்கி காலி செய்வார்களே அல்லது அரசியலில் ஈடுபட்டு அவர்கள் ஜெயிலுக்குப் போனால் நீலி கண்ணீர் வடித்து ஆனந்தமாக எந்த தொந்தரவும் இல்லாமல் சாகலாமே என்ற ஆசை இருப்பது தவறா?
வே. உமா, விழுப்புரம்: பின்னால் மாணவர்கள் இதற்கு வட்டியுடன் எதிர் பலன் அடைவார்கள். அஸ்திவார தவறுகள் மேலேறும் போது குப்புற தள்ளிவிடும். பள்ளிகளை மூடி, பின் நிலமை சீரானதும் பரீச்சை நடத்தலாம். பௌதிக 3-வது விதிபடி, "எல்லா செயல்களுக்கும் எதிரான அதே சக்தி உள்ள எதிர் விளைவுகள் உண்டு" என்பதை மாற்ற முடியாது.. அவசரமாக படிக்க, பாஸாக வேண்டும் என்பது சமூகம் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட கட்டுப் பாடே. அதை தள்ளிப்போடலாம். கை வலிக்கிறதே என்று வைரத்தை பட்டை தீட்டாவிட்டால்,அது கல்லாகவே மதிப்பிழக்கும்.
எஸ். ஜெய்கணேஷ், திண்டுக்கல்:பரிணாம வளர்ச்சி, வைரஸின் மரபணு, வைரஸ் பரவும் முறை, உடலில் எங்கே, எப்படி தாக்குகிறது என்று பல தரப்பட்ட ஆய்வுகள் தேவை. இது போன்ற வியாதிகள் இல்லாத காலத்தில், இருந்த மருந்துகளை போலி மருந்துகளாக (Placebo) கொடுத்து ஒரு சிலருக்கே குணமாகலாம். பெனிசிலின் வரு முன் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமே. அமெரிக்கா போன்ற நாடுகளிலே போட்ட காசுக்கு 5 மடங்கு லாபம் வரும் என்றாலே மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். அது இப்பொது நடந்து கொண்டிருக்கிறது. மாமூல் கலாச்சாரம்,கார்பொரேஷன் வெருப்பு, ஆராய்ச்சிக்கு பெருமை இல்லாமை, கோட்டா வியாதி, போலி கல்வி என்று பல தடங்கல் உள்ள நம் நாட்டில் எதுவும் நடக்காது. இது எதிர் மறை எண்ணம் இல்லை. வருத்தத்தால் ஏற்படும் உண்மை நிலையே
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.