ரிசர்வ் வங்கியில் 'அலுவலக உதவியாளர்' பிரிவில் 841 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: மும்பை 202, சென்னை 71, கான்பூர் 69, ஐதராபாத் 57, நாக்பூர் 55, டில்லி 50, ஆமதாபாத் 50, ஜெய்ப்பூர் 43, கவுகாத்தி 38, கோல்கட்டா 35, சண்டிகார் 31, பெங்களூரு 28, பாட்னா 28, திருவனந்தபுரம் 26, போபால் 25, புவனேஸ்வர் 24, ஜம்மு 9 என மொத்தம் 841 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.2.2021 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மொழி தேர்வு.
எழுத்துத்தேர்வுக்கான உத்தேச தேதி: 2021 ஏப். 9, 10.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலுார், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.450. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 50.
கடைசி நாள்: 15.3.2021
விபரங்களுக்கு: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/RPOAT2402202195B842DDF4EA4A60B777B1547701D2C0.PDF