கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:00

மே 9, அன்னையர் தினம்! - மறக்கவில்லை அம்மா!

ஆராரோ... ஆரிரரோ - என
தாலாட்டு பாடும்போதே
வாழ்வின் சூட்சுமத்தைக்
கற்றுக் கொடுத்தவள் நீ!

கூழ் குடித்துறங்கினாலும்
கூடி வாழ்தலையும்
மனிதர்களை நேசிக்கும் பண்பையும்
ஊட்டி வளர்த்தவள் நீ!

கணக்கு பார்த்து கடமை ஆற்றாமல்
வேளை பொழுதில்லாமல்
வேலை செய்வதற்கு
உரமிட்டவள் நீ!

அதிகாரம் என்ற பெயரில்
அநியாயம் செய்வதற்கும்
துதிப்பாடி சுகித்திருக்கவும்
கற்றுத் தரவில்லை நீ!

வாது வழக்கோ
வம்பு தும்பு செய்யவோ
யாரையும் நிந்திக்கவோ
வழி காட்டவில்லை நீ!

தேடிய பொருளை
மறைத்து வைக்காமல்
பசித்து வந்தவரின் பசியாற்ற
பாங்காய் எடுத்துரைத்தவள் நீ!

சக மனிதர் கண்ணீர்
மண்ணில் வீழ்வதற்குள்
மடியில் ஏந்த
சொன்னவள் நீ!

ஜீவன் இருக்குமட்டும்
கள்ளப் பிழைப்பு செய்யாமல்
பழி பாவங்களுக்கு அஞ்சி
நீதி நெறி தவறாமல்
வாழ்வாங்கு வாழ சொன்னவள் நீ!

வாழ்க்கைக் கோட்டையின்
பூட்டைத் திறக்க
சாவி கொடுக்க வந்த
சரித்திர புருஷர்கள் பலருண்டு...
ஆனாலும், நீ கொடுத்த
அன்பு சாவி மட்டுமே
நிலை தடுமாறாமல்
உலகில் உழல வைக்கிறது!

மானுக்குள் மறைந்திருக்கும்
கஸ்துாரி போல்
பாசப் பூக்களை மனதிற்குள்
குடியிருக்க செய்தவள் நீ!

தொட்டிலில் கற்றுக் கொண்டது
இறுதி வரை என்ற மரபை
மறக்கவில்லை அம்மா...
நீ விதைத்த விதை
வீரியத்துடன் முளைத்தெழுந்து
விருட்சமாகி வளர்ந்துள்ளது!

நீ சொல்லிக் கொடுத்த
வழியில் செல்வதைத் தவிர - உனக்கு
வேறென்ன பிரதியுபகாரம்
செய்துவிட முடியும் அம்மா!

செல்வி நடேசன்,
சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
15-மே-202123:06:12 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அம்மாவுக்கு நிகா அம்மா மட்டுமே. அன்புப்பாதையில் அரவணைத்து பிரதிபலனில்லா பயணம் மேற்ெகாள்ள வேறு எவரால் முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X