அவல் பொரி உருண்டை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அவல் பொரி உருண்டை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2021
00:00

நவ., 19 கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை, அப்பம் செய்து கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

தேவையான பொருட்கள்:
பாகு வெல்ல துாள் - முக்கால் கிண்ணம், அவல் பொரி - ஐந்து கிண்ணம், பல் பல்லாக நறுக்கிய தேங்காய் ஒரு மூடி, ஏலக்காய் 9 (பொடி செய்தது) வறுத்த வேர்கடலை - கால் கப், பொட்டுக்கடலை - கால் கப், வறுத்த முந்திரி - கால் கப்.

செய்முறை: அவல் பொரியை அரிசி ஜல்லடையில் போட்டு மண் போக சலித்து சுத்தப்படுத்தவும். வெல்லத்தை கால் டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, மண் நீக்கி வடிகட்டவும். வெல்லப் பாகில், தேங்காய் பல், ஏலக்காய் துாள், வேர்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி பருப்புடன் அவல் பொரியை கொட்டி கரண்டி காம்பால் நன்றாக கலக்கவும். சூடு பொறுக்கும் பதத்தில் கைகளால் அவல் பொரியை அழுத்தி பிடித்து உருண்டைகளாக்கி தட்டில் வைக்கவும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X