அண்ணாமலை தீபம் பார்த்தால், 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும்
குத்துவிளக்கின் வடிவம்!
தாமரை வடிவ ஆசனம் - பிரம்மா
நீண்ட தண்டு - விஷ்ணு
நெய் இருக்கும் அகல் - ருத்திரன்
திருமுனைகள் - மகேசன்
நுனிப்பகுதி - சதாசிவன்
நெய் - நாதம்
திரி - பிந்து
எரியும் சுடர் - திருமகள்
தீப்பிழம்பு - கலைமகள்
தீப ஜோதி - பிரம்மம்
குத்து விளக்கு!
குத்து விளக்கின் ஐந்து முகங்களும் பெண்மைக்குரிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை ஆகிய ஐந்து நற்பண்புகளைக் குறிக்கும்
விளக்கு ஏற்றுவதன் பலன்கள்!
ஒருமுகம் ஏற்றினால், மத்திம பலன் கிடைக்கும். இரு முகங்கள் - குடும்ப ஒற்றுமை ஓங்கும். மூன்று முகங்கள் - புத்திர பாக்கியம் கிட்டும். நான்கு முகங்கள் - பசு, பூமி உள்ளிட்ட செல்வங்கள் கிடைக்கும். ஐந்து முகங்கள் ஏற்றினால், சகல செல்வங்களும் பெருகும்.
விளக்கில், தாமரை தண்டு திரியிட்டு, பசு நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடும்போது, வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும்.