சினிமா பாடலாசிரியரும், கண்ணதாசனின் நெருங்கிய நண்பரும் ஆன வயலார் ராமவர்மா, இறந்தபோது, அவர் வயது: 47. பாடகராக ஜேசுதாஸ் அறிமுகமாகி பாடிய பாடல்கள் அனைத்தையும் எழுதியவர், வயலார் தான். ஆனால், நன்றி உணர்வில் கஞ்சத்தனம் காட்டும் பாடகர் என்பதை, வயலார் விஷயத்தில் நிரூபித்து விட்டார், ஜேசுதாஸ். குடிப்பழக்கத்தால் உடல் நலம் பாதித்து, ரத்த வாந்தி எடுத்தபோதிலும், செய்தியாளரிடம் சிகரெட் பாக்கெட்டை கொடுத்து, 'இதை பத்திரமாக வைத்து, நான் குணமாகி திரும்பும்போது தந்து விடு...' என்றார், வயலார். ஆனால், அவர் உயிருடன் திரும்பவில்லை. அந்த சிகரெட் பாக்கெட்டை, தன் மரணம் வரை பாதுகாத்து வந்தார், அந்த செய்தியாளர்.
வயலாருக்கு நினைவு மண்டபம் அமைக்க, அன்றைய முதல்வர் அச்சுதமேனன் தலைமையில், 5 லட்சம் ரூபாய் வசூலிக்க திட்டம் போட்டனர். ஆனால், 20 லட்சம் அள்ளி வழங்கினர், அவரது ரசிகர்கள். நிதி உதவி கேட்டு, ஜேசுதாஸை அணுகிய போது, 'கள்ளு குடிச்சு செத்தவருக்கெல்லாம், 10 பைசா தர மாட்டேன்...' என்று கூறிவிட்டார்!
— ஜோல்னாபையன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
தருமம் செய்வது ஒருவரின் விருப்பம் ஆனால் "சொல்வது " என்பது தனி மனிதர் விருப்பம் கிடையாது. பின்னர் தருகிறேன் என்றோ எதாவது சொல்லி இருக்கலாம். இதே போல் தான் சினிமா பாட்டுக்கள். 1980 களில் இருந்து திரை இசை மேம்பட்டது ஆனால் பாடல்கள் ? பாடியவர்கள் ? . ஒருபக்கம் பாட்டில் பெண் பாடகியுடன் விரசமாக முக்கி முனகி விட்டு அடுத்த பக்கம் பக்திப்பரவசமாக பாடி காசு பண்ணுவார்கள். கந்த சஷ்டி மேட்டில் "பதினெட்டு வயசு இல மொட்டு மனசு ஏங்குது பாய் போடவாம்" இப்படி ஒரு பாட்டை பாட அந்த ஆண் பெண் பாடகர்களுக்கு நா கூசவில்லை. 1980 க்கு முன் பாடல்வரிகள் விரசம் எல்லோருக்கும் தெரியாமல் இருக்க பாடல்களை அப்ப்போதையை பாடகர்கள் பாடுவார். இப்போதோ பாடல் நடுவில் விரச சிரிப்பு முக்கல், சீய் , ஆஅ அலறல் என்று மோசமாக உள்ளது, ஒரு நல்ல விஷயம் KJ அது போன்ற பாடல்கள் பாடவில்லை என்று நினைக்கிறன்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.