தமிழகம்
மே 2: கன்னியாகுமரி லோக்சபா தேர்தலில் விஜய் வசந்த் வெற்றி.
நனவான கனவு: மே 7: பத்தாண்டுக்கு பின் தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழகத்தின் 13வது முதல்வராக ஸ்டாலின் 68, பதவியேற்பு.
மே 9: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமனம்.
மே 10: தமிழகத்தில் முழு ஊரடங்கு (மே 10 - 24) அமல்.
மே 10: எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி (அ.தி.மு.க.,) தேர்வு.
மே 12: தமிழக சட்டசபை சபாநாயகராக தி.மு.க.,வைச் சேர்ந்த அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு.
மே 13: கடலுாரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் பலி.
மே 20: தமிழகத்தில் 18 -44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவக்கம்.
மே 27: 2022-23 கல்வி ஆண்டு முதல் தமிழில் பாடம் நடத்த இன்ஜினியரிங் கல்லுாரிக்கு அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) அனுமதி.
மே 31: சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர், கோயில் பணியாளர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.
இந்தியா
மே 1: குஜராத்தின் பரூச் மாவட்ட மருத்துவமனை தீ விபத்தில் 18 கொரோனா நோயாளி பலி.
மே 2: அசாமில் நடந்த தேர்தலில் பா.ஜ. கூட்டணி, ஆட்சியை தக்க வைத்தது.
* மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமுல் காங்.. ஆட்சி.
மே 3: கர்நாடகாவின் சாம்ராஜா நகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 கொரோனா நோயாளி பலி.
மே 5: மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்.,) மீண்டும் பதவியேற்பு.
* மஹாராஷ்டிராவில் 'மராத்தா' பிரிவினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மீண்டும் ரங்கசாமி: மே 7: புதுச்சேரி முதல்வராக நான்காவது முறையாக என்.ஆர்.காங்கிரசின் ரங்கசாமி பதவியேற்பு.
மே 8: ஆந்திராவின் கடப்பாவில் சுண்ணாம்பு சுரங்க வெடிவிபத்தில் 10 பேர் பலி.
மே 10: அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா (பா.ஜ.,) பதவியேற்பு.
* 17 கோடி 'டோஸ்' தடுப்பூசியை இந்தியா ௧௧௪ நாளில் செலுத்தி சாதனை. அமெரிக்கா 115, சீனா 119 நாளில் எட்டின.
மே 13: கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது 'டோஸ்' செலுத்தும் இடைவெளி 12-16 வாரமாக நீடிப்பு.
மே 17: கொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசின் 'டி.ஆர்.டி.ஓ.,' தயாரித்த '2டிஜி' மருந்து விநியோகம் துவக்கம்.
மே 17: 'நாரதா' லஞ்ச ஊழல் வழக்கில் மேற்கு வங்கத்தின் 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்தது.
புரட்டிய புயல்: மே 20: 'டாக்டே' புயலில், மும்பை கடலில் எண்ணெய் தொழிலாளர்கள் தங்கியிருந்த மிதவை கப்பல் கவிழ்ந்ததில் 37 பேர் பலி.
மே 20: கேரள முதல்வராக மீண்டும் பினராயி விஜயன் (மார்க்சிஸ்ட்) பதவியேற்பு.
மே 21: மஹாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 13 நக்சல்கள் பலி.
மே 25: 'ரோச்' இந்தியா தனியார் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அறிமுகம். ஒரு டோஸ் விலை ரூ. 60,000.
மே 29: கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ. 10 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
மே 31: புதிய பார்லிமென்ட் கட்ட தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு.
உலகம்
மே 3: வங்கதேசத்தில் பத்மாவதி நதியில் படகு கவிழ்ந்ததில் 26 பேர் பலி.
மே 4: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி விவாகரத்து.
மே 5: மாலி நாட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தை பிறந்தன.
மே 11: சீன மக்கள்தொகை 141 கோடியாக உயர்வு. (உலகில் முதலிடம்)
* அமெரிக்காவில் 12 -15 வயதுக்குட்பட்டவர் பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி.
சூப்பர் 'மேபிளவர்': மே 12: உலகின் முதல் தானியங்கி அமெரிக்க கப்பல் 'மேபிளவர் 400' அட்லாண்டிக் கடலை கடந்தது. நீளம் 50 அடி. எடை 8164 கிலோ.
மே 14: நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு.
மே 16: இரு நாடுகளின் 11 நாள் சண்டையில் இஸ்ரேலில் 12, பாலஸ்தீனத்தில் 240 பேர் பலி.
உலக அழகியே: மே 17: மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸா 27, 'மிஸ் யுனிவர்ஸ் - 2020' பட்டம் வென்றார்.
மே 21: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு மாணவர் சங்க தேர்தலில் இந்திய வம்சாவளி மாணவி ராஷ்மி சமந்த் வெற்றி.
மே 25: அண்டார்டிகாவில் உலகின் பெரிய பனிப்பாறை 'ஏ-76' (4320 சதுர கி.மீ.) 'வெடல்' கடல்பகுதியில் உடைந்து விழுந்தது. நீளம் 175 கி.மீ. அகலம் 25 கி.மீ.
மே 26: பஞ்சாப் வங்கி கடன் மோசடி வழக்கில் இந்திய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை சர்வதேச போலீசார், டொமினிக்காவில் கைது செய்தனர்.
மே 26: ஹாங்காங்கில் இளஞ்சிவப்பு 'சகுரா' வைரம் (15.81 காரட்) ரூ. 213 கோடிக்கு ஏலம் போனது.
மே 27: எத்தியோப்பியாவில் 'டைக்ரே' கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 22 அரசு அதிகாரிகள் பலி.
மே 28: நான்காவது முறையாக சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் தேர்வு.
மே 31: சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்ததால் 3 குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி. (இதுவரை 2க்கு அனுமதி)
டாப் - 4
* மே 25: சி.பி.ஐ., இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்.
* மே 28: நைஜீரியாவின் நைஜர் நதியில் படகு மூழ்கியதில் 60 பேர் பலி.
* மே 28: சிரிய அதிபராக தொடர்ந்து நான்காவது முறையாக அல் ஆசாத் தேர்வு.
* மே 29: மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமார் நியமனம்.