பெண்களுக்கு புண்ணியம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2022
00:00

நம் குடும்பத்துப் பெண்கள் ஏதோ ஒரு வகையில், தங்கள் ஆசை நிறைவேறாமல் இறந்து போயிருப்பர். அவர்களின் ஆத்மா சாந்தி பெற சில விதிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.
மகாபாரத ஆசிரியர் வியாசரை விஷ்ணுவின் அவதாரம் என்பர். இவரது தாய் சத்தியவதி. சத்தியவதிக்கு ஒருமுறை சத்திய சோதனை ஏற்பட்டது. இவள், பிதுர் (மறைந்த முன்னோர்) லோகத்தில் அச்சோதா என்ற பெயரில் கன்னியாக இருந்தாள். அதே லோகத்தில் வசித்த அமாவசு என்ற இளைஞனைப் பார்த்தாள். அவனைப் பிடித்துப்போய், தன்னை திருமணம் செய்யும்படி கேட்டாள். அவனும் அவளை யார் என்னவென்று கேட்காமலேயே சம்மதித்து விட்டான்.

அந்த நிமிடமே அவர்கள் பூலோகத்திற்கு வந்து விட்டனர். காரணம், அவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்களை அண்ணன், தங்கையாக கருதுவர். அண்ணனும், தங்கையும் திருமணம் செய்வதென்பது கொடிய பாவம்.
பூலோகத்தில் அச்சோதா, ஒரு நதியாகப் பிறந்தாள். அந்த இளைஞன், கற்பாறையாக அந்த நதியின் கீழ் பயனின்றி கிடந்தான். அச்சோதாவைக் காணாத பிதுர்கள், அவளைத் தேடி பூலோகம் வந்தனர். அவளுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தம் அடைந்தனர். அவளிடம், 'நீ அறியாமல் பாவம் செய்தாலும், அதற்குரிய பலனை அனுபவித்தே தீர வேண்டும். பாவத்தின் பலனை அனுபவித்த பிறகு, நீ நல்ல குடும்பத்தில் பிறப்பாய். அப்போது ஒரு தெய்வமகன் உனக்கு பிறப்பான். அவனால் நீ மிகுந்த புகழ் பெறுவாய்...' என்றனர்.
அந்தப் பெண் தான் சத்தியவதியாகப் பிறந்து, மகாபாரத ஆசிரியர் வியாசரைப் பெற்றெடுத்தாள்.
அப்போது, பிதுர்கள் அவளுக்கு ஒரு தகவலை கூறினர்:
உலகத்தில், தெரிந்தும் தெரியாமலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இறந்த பிறகும் கூட, அந்தப் பாவம் அவர்களை சும்மா விடாது. அவர்களுக்கு பாவ விமோசனம் கொடுக்கும் தகுதி, அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு இருக்கிறது.
இதற்காக, மார்கழி, தை, மாசி மற்றும் பங்குனியில் தேய்பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் வரும் திஸ்ரோஷ்டாகா, அஷ்டகா, அன்வஷ்டகா ஆகிய நாட்களில், இவர்கள் தங்கள் முன்னோரை நினைத்து, தர்ப்பணம் செய்து, தானம் செய்ய வேண்டும்.
இதைச் செய்தால், மறைந்த நம் தாய் வழி பெண்கள் நினைக்கக் கூடாததை நினைத்திருந்தாலோ, திருமணம் செய்ய ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போயிருந்தாலோ, கர்ப்பத்தில் இருக்கும்போதே பெண் சிசுக்கள் அழிந்திருந்தாலோ அவர்கள் செய்த பாவமெல்லாம் நீங்கும். அவர்களது ஆசிர்வாதத்தால், இந்த தர்ப்பணத்தை செய்தவர்களுக்கு ஆயுள் மற்றும் செல்வ விருத்தி ஏற்படும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி தானம் செய்தால், பலன் மேலும் அதிகரிக்கும்.
பிப்., 23, 24, 25 மற்றும் மார்ச் 24, 25, 26ல் இந்த புண்ணிய தினங்கள் வருகிறது. இந்த நாட்களில், உங்கள் குலத்தில் பிறந்து, நிறைவேறாத ஆசையுடன் மறைந்த பெண்களின் ஆத்ம சாந்திக்காக இந்த தர்ப்பணத்தை செய்யுங்கள்; புண்ணியத்தை அள்ளுங்கள்.

தி. செல்லப்பா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X