இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2022
00:00

மனைவியை குறை கூறுபவரா நீங்கள்?
உறவினர் மகன் திருமணத்திற்காக சென்னை சென்று, ரயிலில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த பெட்டியில், நடுத்தர வயதுடைய இரண்டு நபர்கள் மட்டும் அமர்ந்து வந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது, அவர்களின் பேச்சிலேயே தெரிந்தது.
இருவரில் ஒருவர், தனக்கு தானே சத்தமாக சிரித்தபடி, தன் மனைவியின் சமையலை குறை கூறி, நண்பரிடம், தமாஷ் செய்து வந்தார்.

அவரின் நண்பரோ சிரிக்காமல், 'உன் மனைவியின் சமையலை, நீ என்னிடம் குறை கூறுவதை போல, தாம்பத்திய உறவின் குறைபாட்டை, உன் மனைவி, அவர் தோழியிடம் பகிர்ந்தால், உனக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும்...' என்று, 'குட்டு' வைத்தார்.
மேலும், 'கணவன், மனைவிக்கான சேவை குறைபாட்டை, தனிப்பட்ட முறையில் ஆலோசனையாக கூறி, அவரவர் தேவைக்கேற்ப திருத்திக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் வேண்டும். இதை விட்டு அடுத்தவரிடம் குறை கூறி, ஒருவரை ஒருவர் அவமானப்படுத்திக் கொள்ளக் கூடாது...' என்று, அன்போடு அறிவுறுத்தினார்.
தமாஷ் என்ற பெயரில், எல்லை மீறி மனைவியை கலாய்த்த நண்பர், தவறுக்கு வருந்தி, நேர்மையாகவும், நேரிடையாகவும் தன் குறையை உணர்த்தியமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
உங்களில் யாராவது, இப்படி மற்றவரிடம் மனைவியை குறை கூறுபவர் என்றால், அதை விட்டு திருந்தலாமே!
- ஆர். செந்தில்குமார், மதுரை.

இப்படியும் வேலை தேடலாம்!
திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தேன். மண்டபத்தின் வாசலில், மணமக்களுக்கு, பெரிய, 'கட் - அவுட்' வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த கவிதை மற்றும் மணமகனின் நண்பர்கள் பெயரை படிக்க துவங்கினேன்.
ஒவ்வொரு நண்பரும், தங்களது பெயர், படிப்பு, போன் எண் ஆகியவற்றை போட்டிருந்தனர். அத்துடன் சிலர், 'நாங்கள் வேலையின்றி இருக்கிறோம்... வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவோர், எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...' என, குறிப்பிட்டிருந்ததைக் கண்டேன்.
'இது, புது, 'டெக்னிக்'கா இருக்கே...' என நினைத்தவாறு, அதில் பெயர் பதிவிட்ட இளைஞர் ஒருவரிடம் கேட்டேன்.
அவரோ, 'வேலை தேடி, தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களில், ஏகப்பட்ட பணத்தை இழந்து விட்டோம். சமீபத்தில் நடந்த நண்பர் ஒருவரது திருமண நிகழ்வில், இதே போன்று, 'கட் - அவுட்' வைத்தோம். அந்த திருமணத்திற்கு, தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிறைய முதலாளிகள் வந்திருந்தனர். அவர்கள், 'கட் - அவுட்'டில் இருந்த பதிவை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
'பின்னாளில் என் நண்பர்கள் சிலரை அழைத்து, பணியில் அமர்த்திக் கொண்டனர். தற்போது, அவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனர்.
'அந்த முதல் முயற்சி மூலம், நல்ல பலன் கிடைத்ததால், இப்போது வேலை இல்லாமல் இருக்கும், சக நண்பர்களின் பெயர்களுடன், வேலை வேண்டும் என, குறிப்பிட்டுள்ளோம்...' என்றார்.
அவர்களின் வித்தியாசமான முயற்சியை கண்டு, வியந்து, 'கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு, வேலை கிடைக்கும்...' என, வாழ்த்தி வந்தேன்.
- எம். புனிதா, கோவை.

மருத்துவரிடம் செல்லும் முன்...
கிராமத்திலிருக்கும் என் அப்பாவுக்கு, சென்னையில் உள்ள பிரபல மருத்துவரிடம், இதய நோய் சம்பந்தமாக ஆலோசனை பெற, சமீபத்தில், 'அப்பாயின்மென்ட்' வாங்கியிருந்தேன். அப்பாவுக்கு துணையாக நானும் சென்றேன்.
மருத்துவமனையில், மருத்துவரை பார்க்க நிறைய கூட்டம். இரண்டு மணி நேரம் காத்திருந்து, எங்கள் முறை வந்ததும், உள்ளே சென்றோம். உள்ளே சென்றதும், மருத்துவரிடம் வணக்கம் சொல்லி, நோய்கள் பற்றி எதுவும் சொல்லாமல், ஒரு பேப்பரை எடுத்து மருத்துவரிடம் நீட்டினார், அப்பா.
பேப்பரை படித்து முடித்ததும், 'வெரி குட்... எல்லாரும் இப்படி அவங்கவங்க பிரச்னைகள், சாப்பிடும் மாத்திரைகள், நோயின் தன்மை போன்ற எல்லாவற்றையும் புள்ளி விபரத்தோடு எழுதி எடுத்து வந்து விட்டால், நாங்களும் எந்த குழப்பமுமின்றி, உங்களுக்கு தெளிவாக மருத்துவம் செய்ய உதவியாக இருக்கும்.
'மேலும், எங்களிடம் நேரில் சொல்லும்போது சில முக்கியமான தகவல்களை மறக்கவும் வாய்ப்புள்ளது...' என்று சொல்லி, அப்பாவிடம் சில சந்தேகங்களை கேட்டு உறுதிபடுத்திய பின், ஐந்தே நிமிடத்தில் ஆலோசனைகளை கூறி, பாராட்டி அனுப்பி வைத்தார்.
வாசகர்களே... மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்லும் முன், இதுபோன்ற நடைமுறைகளை கடைப்பிடிக்கலாமே!
எ.எம்.எம். ரிஸ்வான், சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-பிப்-202201:48:53 IST Report Abuse
D.Ambujavalli பெரும்பாலான ஆண்கள் பொது வெளியில் மனைவி பற்றி அவர் இரு க்கும்போது கூட, 'இவள் சமையலை சாப்பிட்டு இத்தனை வருஷமாகியும் எதுவும் ஆகவில்லை, அவ்வளவு எதிர்ப்பு சக்தி வந்துள்ளது, என்றும், அவருக்கு படிப்பறிவு, பகுத்தறிவு குறைவு' என்பதுபோல ஜோக் அடிக்கிறார்களாம்.... கூறி புண்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவர். இந்த பதிவு நல்ல பாடம் அவர்களுக்கு
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
20-பிப்-202212:28:59 IST Report Abuse
Girija @எ.எம்.எம். ரிஸ்வான், சென்னை. நல்ல முயற்சி, சில டாக்டர்கள் பேஷண்ட் ஐ பேசவிடாமல் பணம் பண்ணுவதிலேயே குறியாக இருப்பர். சில சமயங்களில் பேஷண்ட் விரைவாக தங்கள் முழு பிரச்னையை சொல்லமுடியாமல் அல்லது மறந்து விடுவர். இது நல்ல யோசனை, உறவுகளுக்கும் பேஷன்டின் பிரச்சனை முழுவதுமாக அறியமுடியும். @எம். புனிதா, கோவை வடிவேலு பின் லாடன் காமெடி போல் உங்கள் பதிவு பலப்பல ரூபங்களில் இங்கு படம் எடுத்துவிட்டது. முதலில் வேலை இல்லாத இளைஞர்கள் இப்படி போர்டு வைக்க சம்மதிப்பார்களா? @ஆர். செந்தில்குமார், மதுரை மனைவியை பற்றி ஆண்கள் பெரும்பாலும் மற்ற பெண்களிடம் தான் சொல்வர். இப்படிப்பட்ட ஆண்கள் பகுத்தறிவு ஜிப்பா பை ஆசிமிகளை போன்ற ஆபத்தானவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X