வணக்கம். இந்து சமய அறநிலையத்துறை ஊழியரா, 'பரிசாரகர்' எனும் அர்ச்சக உதவியாளரா, சங்கரன்கோவில், அருள்மிகு சங்கர நாராயணர் சுவாமி திருக்கோவில்ல 1978-ல இருந்து 2010 வரைக்கும் 32 ஆண்டுகள் 'இறைபணியே கதி'ன்னு கிடந்தவர் என் கணவர். எனக்கு ஒரே ஆதரவா இருந்த என் கணவர் சர்க்கரை நோயால 17.04.2019ல் காலமாயிட்டார். அவரோட கடைசி காலம் வரைக்கும் அவருக்கு 2,000 ரூபாய் ஓய்வூதியம் வந்தது. அவர் இறப்புக்கு அப்புறம் குடும்ப ஓய்வூதியம் வேண்டி, தேவையான சான்றிதழ்களோட தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், சங்கர நாராயணர் சுவாமி திருக்கோவில் துணை ஆணையர்/ செயல் அலுவலர் அலுவலகங்கள்ல விண்ணப்பிச்சேன்; பதில் இல்லை.
இப்போ, சிகிச்சைக்காக சென்னை, நங்கநல்லுார்ல இருக்குறேன். ஆலந்துார் ஆர்.ஐ., அம்மா கால்ல விழுந்து கதறினதுக்கு அப்புறம், விதவை உதவித்தொகை 1,000 ரூபாய் 5 மாதமா வருது. இப்போ, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு மனு கொடுத்து அலைஞ்சிட்டு இருக்குறேன். உங்க ஆட்சியிலேயும் அர்ச்சக உதவியாளர் மனைவிக்கு நீதி கிடைக்காதா? - 'அர்ச்சக உதவியாளர்' குடும்ப ஓய்வூதியத்திற்காக 3 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் ஜெயலட்சுமி சிவராமகிருஷ்ணன், நங்கநல்லுார், சென்னை.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
அரசு உதவி செய்யுமா என்பது சந்தேகம்தான். இதை படிக்கும் நல்லுள்ளங்கள்தான் அந்த அம்மைக்கு உதவி புரியவேண்டும். அட்லீஸ்ட் இந்த செய்தியை ஷேர் செய்தால், ஒரு சிலர் உதவ முன்வருவார்கள்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.