கரும்புச்சாறு திருவிழா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2022
08:00

மே 3 அட்சய திரிதியை

அட்சய என்றால், வளர்வது என்பது மட்டுமல்ல, என்றும் குறையாதது என்ற பொருளும் உண்டு. நம் வீட்டில் வளம் மட்டுமல்ல, நலமும் வளர வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொன்னது, இதனால் தான். இதற்கு, உணவே மருந்து என்ற கொள்கையை கடைப்பிடித்தனர், நம் முன்னோர். குறிப்பிட்ட காலங்களில், குறிப்பிட்ட உணவு மற்றும் பானங்கள் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

புரட்டாசி நவராத்திரி காலத்தில், பயிறு வகைகளை சாப்பிடுவது, தோல் நோயை தடுக்கும். சித்திரை, வேப்பம்பூ பச்சடி, கிருமிகளைக் கொல்லும். இதுபோல், அட்சய திரிதியை அன்று, கரும்புச்சாறு பருகுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த விழாவை, 'வர்ஷி தபா' என்கின்றனர், ஜைனர்கள். வர்ஷி என்றால், எல்லையற்ற தெய்வீக அன்பைப் பொழிதல். தபா என்றால் தருணம். என்றும் குறையாத மாசற்ற அன்பை பிறரிடம் கொட்டும் திருநாள் என, இதை சொல்கின்றனர்.
ஜைனர்களின் முக்கிய தீர்த்தங்கரரான ரிஷபநாதர், தன் ஓராண்டு கால தவத்தை முடித்து, வளர்பிறை திரிதியை திதியன்று ஊர் திரும்பினார். அவருக்கு, ஹஸ்தினாபுரம் அரசரான ஷ்ரேயான்ஸ், கரும்புச்சாறு கொடுத்து உபசரித்தார். இந்த நாளை அட்சய திரிதியை என கொண்டாடுகின்றனர், மக்கள். இந்த நாளில் கரும்புச்சாறு பருகுகின்றனர். இதனால், உடல்நலம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
புதிய தொழில்கள் துவங்குவது, தங்கம், சொத்து வாங்குவது, தானிய விதைகள், பழங்கள், இனிப்பு தானம் செய்வது, நிச்சயதார்த்தம் நடத்துவது என, ஆனந்தமான விஷயங்களைச் செய்கின்றனர். வாழ்வின் வளர்ச்சிக்கு அடிகோலும் விழாவாக அட்சய திரிதியை விளங்குகிறது.
கணவன் நலமுடன் வாழ, பெண்கள் காரடையான் நோன்பு, வரலட்சுமி விரதம் போன்றவற்றை அனுஷ்டிப்பது போல, அட்சய திரிதியை நன்னாளிலும் கணவனுடன் ஒற்றுமையாக வாழ, லட்சுமி நாராயணருக்கு தயிர் சாதம் படைத்து பூஜை செய்வது, பலமடங்கு பலன் தரும்.
ஜார்க்கண்ட் மாநில மக்கள், இந்த விழாவன்று கரும்புச்சாறு தானம் செய்து, தாங்களும் பருகுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான, சிவப்பணுக்களை அதிகரிக்கும் சக்தி கரும்புச்சாறுக்கு உண்டு. குறிப்பாக, திரிதியை திதியில், இதைப் பருகும் போது, எதிர்ப்பு சக்தி பல மடங்கு பெருகும் என்கின்றனர்.
அட்சய திரிதியை திங்கட் கிழமையில் வந்தால், அதிக நன்மை தருவதாக அமையும். இது, சிவன் மற்றும் சந்திரனுக்குரிய நாள் என்பதால், மனபலம் பலமடங்கு அதிகரிக்கும். அட்சய திரிதியை நன்னாளில், அனைவரும் நலமும் வளமும் பெற்று, வாழ பிரார்த்திப்போம்.

தி. செல்லப்பா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X