* ஆறுமுகம் ஏன்ம்ல உதவி ஆய்வாளரை கத்தியால குத்தினான்; அவன் தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டிட்டு வந்ததை கண்டிச்சாவளாம்... அதான்! சரிடே... சரக்கு வித்தது யாரு; அரசாங்கம்தான்! உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் சொல்லி மக்கள் பணத்தை நிவாரணமா தந்தது யாரு; ஏட்டி என்ன கேள்வி கேக்கே... அதுவும் அரசு தான்... இது 'திராவிட மாடல்'லா!
* 'படித்தால் திருமண உதவித்தொகை என்பதற்கு பதில் படிப்பதற்கே உதவித்தொகை என்பதுதானே சிறப்பு' - தமிழக நிதி அமைச்சர். ஏன் சார்... 'மக்களோடு வாழ்கிறேன்'னு உருட்டுறதுக்கு பதிலா 'அம்மா' உணவகத்துல பசியாறி, அரசுப்பேருந்துல பயணிச்சு, அரசு மருத்துவமனையில தடுப்பூசி போட்டுக்கிறதுதானே பெரும் சிறப்பு!
* 'பிரதமரின் மாநிலமான குஜராத்தில் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசுதான் நியமிக்கிறது'ன்னு நீங்க சொல்றது சரிதான் முதல்வரே; ஆனா, அரசு திட்டங்களோட நிலை பற்றி சொல்ற 'மின்னணு தகவல் பலகை'யை முதல்வரோட சேர்த்து பொதுமக்களும் தெரிஞ்சுக்கிற வசதி அங்கே இருக்குதாம்... இங்கே உண்டா?
* 'நீட் ரத்து என்பது மக்கள் விருப்பம்; அம்மசோதாவை கவர்னர் கண்டுகொள்ளாதது மக்களை அவமானப்படுத்தும் செயல்'னு எல்லாத்துக்கும் மக்களை காரணம் காட்டுறீங்களே... அரசு ஊழியர்கள் 'ஆர்ப்பாட்டம்' எனும் பெயரில் மக்கள் பணி புறக்கணித்து பெற்ற தண்டனையை, 'முறைப்படுத்துதல்'ங்கிற பேர்ல ரத்து பண்றது மக்களோட விருப்பமா? உழைப்போம் உயர்வோம்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
'அரசு ஊழியர்கள் 'ஆர்ப்பாட்டம்' ஊழியர்களின் பிறப்புரிமை. மக்களில் அவர்களும் அடக்கமே. ஆக, ஊழியர்களுக்கு தண்டனை என்பது ஜனநாயக மக்களின் தண்டனையாவதை அரசாங்கம் விரும்பவில்லை நீட் தேர்வு' வருங்கால ஜனநாயக மக்களை தண்டிப்பது சட்டவிரோதம் ஆகாதா
'பிரதமரின் மாநிலமான குஜராத்தில்..' தெளிவாள கேள்வி. இன்னும் அரசு திட்டங்களோட நிலை பற்றி சொல்ற 'மின்னணு தகவல் பலகை'யை சைனாவிலேயிருந்து தங்கள் சிலவில் இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு ஒப்புக்கொள்ளவில்லையே, அந்த காசைத்தானே ஓசிகளாக ஏற்கனவே தமிழ் மக்களுக்கு கொடுத்து விட்டோமே, அதையே பிரதமரின் மாநிலமான குஜராத்தில் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசுதான் நியமித்து மக்களுக்கு சேர வேண்டிய இலவசங்களை 'மின்னணு தகவல் பலகை'யாக மாற்றி, குஜராத் மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அண்ணா இருந்திருந்தால் அதை எதிர்த்து இங்கே ஒரு போராட்டம் நடந்திருக்குமே அதான் "மின்பலகை" வேண்டாம் என்கிறோம். ஷாக்கடி மாறன், மின்பலகை பிரிவு, அறிவாலயம்.
படிப்பதற்கே உதவித்தொகை என்பது கனவுதானே. படிச்சு முடிச்சா, கலியாணமாகும்ங்கறதுவும் கனவுதானே அதான் இப்புடி. "போற்றினும் போற்றுவர், பொருள் கொடவிடில் தூற்றினும் தூற்றுவர், சொன்ன சொல்லை மாற்றினும் மாற்றுவர்" என்ற ஹிந்தி எதிர்ப்பு புலவர்கள் நிறைந்த மாநில அரசு இப்படித்தானே சொல்லமுடியும்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.