அக்கரை அதிசயம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2022
08:00

ச.சந்தியாவின் பள்ளிப்பருவம் பேருந்து வழித்தட எண் 96. கோவை, காந்திபுரத்தில் இருந்து சின்னாம்பதி வரும் அப்பேருந்து அன்று வரவில்லை என்றால், மற்ற மாணவர்களைப் போல் சந்தியாவிற்குள்ளும் விடுமுறை கொண்டாட்டம் பற்றிக்கொள்ளும். ஆனால், அது சில நிமிடங்கள் மட்டுமே!

தகவல் அறிந்து வரும் அப்பாவோடு பள்ளி செல்கையில் சந்தியா கேட்கும் கேள்வி...
'மத்தவங்க எல்லாம் அவங்க பிள்ளைகளை சுதந்திரமா விடுறப்போ, நீங்க மட்டும் ஏன்ப்பா என்னை கொடுமைப்படுத்துறீங்க?'

'அது... எப்படியாவது நீ படிக்கணும்மா; நீ படிச்சா நம்ம கிராமமே முன்னேறிடும்' அப்பா இப்படி சொன்னதும், 'நான் படிச்சா கிராமம் எப்படி முன்னேறும்' என்று அந்த வயதில் சந்தியாவிற்கு தோன்றியிருக்கிறது. இன்று...
பட்டப்படிப்பு முடித்து தனியார் பணியில் இருந்த சந்தியாவிற்கு விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டிய கட்டாயம். மூன்றே மாதங்கள்தான்; 'கொரோனா' சூழலில் வேலை இழந்து கிராமம் திரும்பி விட்டார்.

ஊரடங்கில் என்ன செய்தீர்கள் சந்தியா?
எங்க கிராமத்துல நாலைஞ்சு பேர்கிட்டே ஆன்ட்ராய்டு போன் இருக்கு. ஆனா, ஊருக்குள்ளே சிக்னல் கிடைக்காதுங்கிறதால 'ஆன்லைன்' கல்வி எடுபடலை. 'ஊர் பிள்ளைகள் படிப்புல பின்தங்கிடக் கூடாது'ன்னு பாடம் நடத்த முடிவு பண்ணினேன்.

கட்டணம் எவ்வளவு வாங்குனீங்க?
காட்டு வேலைக்கும், 100 நாள் வேலைக்கும் போய் பசியை விரட்டுறவங்க எங்க மக்கள்; தவிர, அறிவை பகிர பணம் வாங்குறதுல எனக்கு உடன்பாடில்லை!
இவரது கற்பித்தலின் படிநிலைகள்... முதலில் விளையாட்டு; பின்னர் நடனம்; நடனத்திற்கு பின்பே வகுப்பு! காரணம் கேட்டால், 'கஷ்டப்படுற ஜனங்க; கல்வி சந்தோஷமா இல்லேன்னா எழுந்து போயிடுவாங்க' என்கிறார்.
கோவை பழங்குடி மலைக்கிராமமான சின்னாம்பதியின் முதல் பட்டதாரி, 21 வயது சந்தியா. அம்மா நள்ளியும் அப்பா சண்முகமும் இரண்டாம் வகுப்பை தாண்டாதவர்கள். தம்பி சதீஷ்குமார் ஐ.டி.ஐ., மாணவன்.

'கொரோனா' காலம்...
ஊரடங்குல அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை; ஆனாலும், சந்தோஷத்துக்கு குறையில்லை; நிற்காம ஊத்தெடுக்குற பொன்னுாத்து... ஊரைச்சுற்றி படர்ந்திருக்கிற பசுமை... பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், நொண்டி விளையாட்டுன்னு... அதுவொரு வசந்தகாலம்!

சந்தியா... இப்போது?
பள்ளிகள் திறந்துட்டாங்க; பணத்தேவைக்கு நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன்; 'சின்னாம்பதியில படிக்காதவங்க யாருமே இல்லை'ங்கிற சூழல் உருவாகுறதுக்கு நானும் காரணமா இருக்கணும்னு விரும்புறேன். அதனால, விடுமுறை நாட்கள்ல தொடர்ந்து வகுப்பு நடத்துறேன்.

சந்தியாவின் ஆசைகள் 1000

* கிராமத்திற்கு நிலையான போக்குவரத்து
* உழைப்புக்கேற்ற ஊதியம்
* அரசுப்பணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X