அரசு ஊழியர்களோட அலட்சியத்தினால, ஆட்டோ மேல மரம் விழுந்து பலியான திருநெல்வேலி உயிர்களோட குடும்பத்துக்கு ஆறுதல் அறிக்கை விடுற நீங்க, அரசு வாகனம் என் மகள் உயிர் பறித்த சம்பவத்துல இப்படி மவுனமா இருக்குறது ஏன்?
சம்பவம் நடந்த ஏப்ரல் 15, 2022 அன்னைக்கு 'புனித வெள்ளி' விடுமுறை; காலை 9:20 மணிக்கு, கல்லை பிரதான , வீதியில ஓரமா நடந்திட்டிருந்த என் மகள் மேல, அதிவேகமா வந்த அரசு ஜீப் மோதி விபத்து. பின்னந்தலையில பலத்த அடிபட்டதால சம்பவ இடத்துலேயே அவ உயிர் அடங்கிருச்சு. குழந்தையோட சடலத்தை வைச்சு போராட்டம் பண்ண விருப்பமில்லை;
அன்னைக்கே இறுதிச்சடங்கு பண்ணிட்டேன். அரசு விடுமுறை நாளான அன்னைக்கு விபத்தை ஏற்படுத்தினது TN 15 G 0114 எண் கொண்ட அரசு வாகனம். மூன்று பிரிவுகள்ல சங்கராபுரம் காவல் நிலையத்துல வழக்கு பதிவாகியிருக்கு!
அய்யா... ஏழை விவசாய குடும்பம் எங்களோடது; சிலம்பம், கராத்தேன்னு சாதிச்ச என் மகளை ஐ.ஏ.எஸ்., ஆக்கணும்னு கனவு; எல்லாம் போச்சு. இந்த மே 14ம் தேதி 10வது பிறந்த நாளை எதிர்பார்த்துட்டு இருந்தவ இறந்து, இன்னையோட 38 நாள்! 'திராவிட மாடல்' ஆட்சியில என் மகள் மரணத்துக்கு என்ன நீதி?
- அரசு விடுமுறை நாளில் அரசு அதிகாரி குடும்பத்தோடு பயணித்த அரசு வாகனத்தால் பலியான 9 வயது கோபிகாவின் தாய் சுமதி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
தாயீ சுமதி: ஒரு சகோதரி கண்ணீர் சிந்துவது முதல்வருக்கே கண்ணில் ரத்தம் வரச்செய்து விட்டதே அவசரத்தில் பிரேக் போடுவதற்குப் பதில் ஓட்டுனர் வேக காலமுக்கிய, திடீர் என்ற கால் கெண்டை வலியால் செய்திருக்கலாம் என்கிறார் அண்ணா மருத்த பல்கலை கழக டீன் மருந்தழகர். இது பற்றி ரிப்போர்ட் தர நீதிபதி நேரடிமாறருக்கு உத்திரவு அனுப்பட்டுள்ளது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.