* பட்டுச் சேலைகளை துவைக்கும் போது, அலசும் நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால், சாயம் போகாது, மங்காது; சேலையும் பளிச்சிடும்
* வெள்ளிப் பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது, இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்
* ஆடையில் படிந்த மருதாணி கறை போக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு அலசினால், கறை போய் விடும்
* மேஜை டிராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தடவினால், எப்போதும் சிரமமின்றி திறந்து மூடலாம்
* பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால், அவை நன்றாக பளிச்சிடும்.