அவளே சரணம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2022
08:00

'வறுமை தரும் பரிதாபத்திலும் ஆண் - பெண் பேதம் உண்டு' என்கிறது ப.நாராயணம்மாளின் வாழ்வனுபவம்!

'டீ வியாபாரத்துக்காக என்னோட செல்போன் நம்பர் கொடுத்திருப்பேன்; ஆனா, நேரம் காலம் பார்க்காம அழைப்பாங்க! 40 ரூபாய் பாக்கி இருக்குறப்போ, 20 ரூபாய் ஏற்கெனவே தந்துட்டதா சொல்லி ஏமாத்துவாங்க. 'இந்த பக்கம் எல்லாம் வராதேம்மா'ன்னு முகத்துல அடிக்கிற மாதிரி டீக்கடைக்காரங்க திட்டுவாங்க. கடந்த ஆறு ஆண்டுகள்ல இதுமாதிரி நிறைய அனுபவங்கள்!'

சைக்கிள் கேரியரில் 10 லிட்டர் டீ கேனை சுமந்தபடி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தின் சாலைகளில் வலம் வரும் இவருக்கு பள்ளி செல்லும் இரு மகள்கள், ஒரு மகன்!

ஓய்வுக்கு நேரம் இருக்குதா?
வயசு கூடுறதனால ஓய்வுக்கு அடிக்கடி உடல் கெஞ்சுது. பத்து நிமிஷம் கண்ணயர்ந்தா, 'நீ இப்படி துாங்கினா பிள்ளைகளோட பசி தணிக்க என்ன பண்ணுவே'ன்னு மனசு சத்தம் போடுது; அடுத்த நிமிஷமே துாக்கத்தை உதறிட்டு சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சிடுறேன்!

பிள்ளைகள் என்ன சொல்றாங்க?
'போன தீபாவளிக்கு வாங்கின சட்டையே புதுசாத்தான் இருக்கு; இந்த வருஷம் புதுசு வேண்டாம்மா'ன்னு மகன் சொல்றான்! 'கொடி வரைஞ்சது போக கோலப்பொடி நிறைய இருக்கு; பொங்கலுக்கு தனியா வாங்க வேண்டாம்'னு பொண்ணுங்க சொல்றாங்க! 'போதும்'ங்கிற மனசால அவங்க நிறைவா இருக்குறதா நம்புறேன்!
கடந்த 2017ல் ரயில் மோதி கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட, மூன்று பிள்ளைகளுக்கு தந்தையுமாகி நிற்கிறார் அரக்கோணம் கைனுார் கிராமத்தின் 38 வயது நாராயணம்மாள்.

அப்பா இருந்திருந்தால்...?
மூத்த மகள் கலைவாணி: ஸ்கூல்ல 'பேரன்ட்ஸ் மீட்டிங்' நடக்குறப்போ வந்திருப்பார்! எங்க ஸ்கூலுக்கும் டீ கொடுக்குறதால அம்மா வர்றதில்லை!

அம்மா டீ விற்கிறது...
இளைய மகள் ஷாலினி: அவங்க விற்பனை பண்ற இந்த டீ தான் எங்களுக்கு வாழ்வாதாரம்; அவங்களைவிட ஒருபடி மேல இந்த தொழிலை நாங்க நேசிக்கிறோம்!

உங்க விருப்பப்படி ஒருநாள் முழுக்க அமைந்தால்...
எங்களோட ஒருநாள் தேவைங்கிறது ரொம்பவே சின்னது; அதுக்கான பணம் கையில இருக்குதுன்னா, அந்த ஒருநாள் முழுக்க அம்மாவை எங்க பக்கத்துலேயே வைச்சுக்குவோம்!
கலைவாணி சொல்ல ஷாலினியும், உதயாவும் தலையாட்ட, பொங்கி வரும் தன் உணர்வை மறைக்க தலைகுனிந்து கொள்ளும் நாராயணம்மாள், தினமும் 300 டீ விற்கிறார். ஆதரவற்றோர் கேட்டால் இலவசமாகவும் தருகிறார். அதை ஆச்சரியமாகப் பார்த்தால், 'கொடுத்து உதவ பணம் இல்லை... இதை கொடுக்கிறேன்' என்கிறார்.
'நாங்க நல்லா படிச்சு அம்மா படுற கஷ்டத்துக்கு அர்த்தம் கொடுக்கணும்!' - மூன்று பிள்ளைகளின் ஆசை இதுதான்!

கைகூடட்டும் கனவுகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
Sutha - Chennai,இந்தியா
14-செப்-202209:10:14 IST Report Abuse
Sutha அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.
Rate this:
Cancel
Vara tha - Calgary,கனடா
13-செப்-202208:52:40 IST Report Abuse
Vara tha இவருடைய தொலைபேசி எண் கிடைத்தால் நலம். நன்றி
Rate this:
Cancel
Devan - Chennai,இந்தியா
12-செப்-202218:56:25 IST Report Abuse
Devan ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X