க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:
1br@@இந்தியா சுதந்திரம் பெறுமுன், தலைநகர் டில்லியிலுள்ள காசிதாபாத் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார், நேரு. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம், கடல் அலையென திரண்டிருந்தது.
ரயிலில் வந்து இறங்கிய அந்த தலைவரை நேரில் காணவும், மாலையிட்டு மரியாதையுடன் வரவேற்க, முண்டியடித்து முன்னேறினர், மக்கள்.
அந்நிலையில், ரயில் நிலையத்தை கூட்டிப் பெருக்கும் ஒரு தொழிலாளி, தலைவரை காண, மாபெரும் கூட்டத்திடையே நெருக்கி தள்ளி முன்னேற முனைந்தார். அப்போது, 'இழிந்த வேலை செய்யும் தோட்டி நீ, முடிந்தால், தனியாக ஒதுங்கி நின்று பார். எங்களுடன் வராதே...' என்று அதட்டினார், ஒருவர்.
சற்று ஒதுங்கி நின்று, தலைவரின் முகத்தையாவது பார்க்கலாம் என, நினைத்துக் கொண்டிருந்தான்.
பெரிய கூட்டத்தில், அன்பு வெள்ளத்தில் அகப்பட்டு, வணக்கத்தை தெரிவித்துக் கொண்டிருந்த நேரு, ஒதுக்குப்புறமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த தோட்டியை கவனித்து விட்டார்.
அடுத்த நொடி, கூட்டத்தையும், சாரணர், போலீசையும் தள்ளி, வேகமாக அந்த தொழிலாளி நின்ற இடத்தை நோக்கிச் சென்றார்.
அவரருகே சென்று, 'என் இனிய இந்திய சகோதர நண்பனே, என்னைப் பார்க்க விரும்பிய நீ, ஏன் ஒதுக்குப்புறமாக ஒதுங்குகிறாய். இதோ உன் அருகில் நான். இப்போது, உன் ஆசை தீர என்னைப் பார்...' என்றவர், பெருமிதத்துடன், அவரது தோளில் கையை போட்டு அணைத்தபடி நின்றார், நேரு.
மேலும், தம்மை படம் பிடிக்க விரும்பிய புகைப்படக்காரர்களை அழைத்து, தாமும், அந்த தொழிலாளியும் நிற்பதை படம் எடுக்குமாறு செய்தார்.
***
மு.அப்பாஸ்மந்திரி எழுதிய, '200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்' நுாலிலிருந்து:
இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, சிறையில் இருந்தவர்களுக்கு, ஆங்கிலேய அரசு வழங்கிய ரொட்டியில், மண் கலந்திருந்தது.
அதைக் கண்ட ஜவஹர்லால் நேரு, கோபத்துடன், 'மண் இல்லாத ரொட்டி வேண்டும்...' என்றார்.
மண் இல்லாத ரொட்டி கேட்டதும், கோபம் கொண்டார், சிறை அதிகாரி.
உடனே, நேருவை பார்த்து, 'ரொட்டியில் கலந்திருப்பதும், உங்கள் தாய் நாட்டு மண் தான். சாப்பிடுங்கள்; அது உங்களுக்கு சுவையாக இருக்கும்...' என்றார்.
'நாங்கள் போராடுவது, எங்கள் மண்ணை மீட்பதற்கு தான்; தின்பதற்கு அல்ல...' என்றார், நேரு.
வாயடைத்து போனார், சிறை அதிகாரி. - நடுத்தெரு நாராயணன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
அவர் எவரையும் அதிலும் குறிப்பாக எந்த இந்திய குடிமகனையும் துளியும் மதித்தது இல்லை அதீத முன்கோபி, எடுத்தெறிந்து பேசும் குணமுடையவர்...தன கருத்துக்கு எதிர் கருத்து சொல்பவர், கொண்டிருந்தவர்களை அறவே வெறுத்தவர்....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.