யாரு மேலயோ உள்ள எரிச்சல்ல, கதவை படார்ன்னு சாத்தறது.
இதெல்லாம் அர்த்தமில்லாத கோபம்.
அடுத்த வகை ஆசாமிகள் எப்படி தெரியுமா?
பயனில்லாத பேச்சு பேசறவங்க.
'ஒற்றுமையா வாழணும்ங்கிறதை பத்தி, ஒரு மணி நேரம் பேசினேன். கடைசியில கூட்டம் கலாட்டாவுல முடிஞ்சது...'ன்னார்.
அப்புறம் பேசின பேச்சுக்கு என்ன பிரயோஜனம்?
சில பேர், நேரம் காலம் தெரியாம நம் எதிர்ல வந்து உட்கார்ந்துகிட்டு, அவங்களுக்கு என்னெல்லாம் தெரியுமோ அதைப் பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதுதான் பயனில்லாத பேச்சு.
'ஒண்ணுமில்ல, இந்த எறும்பு எங்கே போய்க்கிட்டிருக்குன்னு பார்த்துக்கிட்டிருக்கேன்...' என்பான்.
இது, பொருத்தமில்லாத ஆராய்ச்சி.
ஐந்தாவது, அன்னியனை நம்புதல்.
இது மாதிரி ஆசாமிகளை ரயில்வே ஸ்டேஷன்ல பார்க்கலாம்.
'சார், இந்த பெட்டியில, 10 ஆயிரம் ரூபாய் வச்சிருக்கேன். இதை பத்திரமா பார்த்துக்கங்க. நான் போய் டிக்கெட் வாங்கிட்டு வந்துடறேன்...' என்பான்.
போயிட்டு வந்து பார்த்தா, இவன் அந்த இடத்துல இருக்க மாட்டான். முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பறதும், ஒரு முட்டாள் தனம்.
ஆறாவது, பகைவரை நண்பரா கருதறது.
விரோதிகிட்ட விசுவாசமா இருக்கறது என்றைக்கும் ஆபத்து. ஆக, முட்டாள்களை இந்த ஆறு வகையில அடையாளம் காணலாம்ங்கறது, வாரியாரின் கருத்து.
- என்று முடித்தார், எழுத்தாள நண்பர்.
ப
இசை மேதை எஸ்.ஜி.கிட்டப்பா, செங்கோட்டையில பிறந்தவர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்கிட்ட நாடகப் பயிற்சி பெற்றவர்.
அந்த காலத்துல, நாடக உலகத்துல இவரு ரொம்ப பிரபலம். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, இவருக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்.
ஒரு தடவை, தஞ்சாவூர்ல, எஸ்.ஜி.கிட்டப்பாவோட நாடகம் நடந்துகிட்டிருக்கு. அந்த பகுதியில் இருந்த முக்கியமான இசைக் கலைஞர்கள்லாம் வந்து, முதல் வரிசையில உட்கார்ந்திருக்காங்க.
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் உட்கார்ந்திருந்தார். முக்கியமான இசை மேதைகள் முன் வரிசையில வந்து உட்கார்ந்திருக்கிறதை பார்த்தார், கிட்டப்பா. அவருக்கு, ரொம்ப உற்சாகமாக இருந்தது.
ரொம்ப கம்பீரமா, 'கோடையில இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே'ன்னு பாட ஆரம்பிச்சார். அந்தப் பாட்டுல வெவ்வேறு ராகம் வரும். அதுல, காபிராகம் ஒரு இடத்துல வரும். அந்த சமயத்துல, நாடக மேடை விளக்கு அணைந்து மறுபடியும் எரிஞ்சுது.
முதல் வரிசையில உட்கார்ந்திருந்த இசை மேதைகளைப் பார்த்தார். அவங்க உட்கார்ந்திருந்த இடமெல்லாம் காலியா இருந்தது; அவங்களை காணல.
இதைப் பார்த்தவுடனே, உற்சாகமா பாடிக்கிட்டிருந்த கிட்டப்பாவுக்கு, மனசு சங்கடமா போச்சு. நாம பாடுற பாட்டு, தரம் குறைஞ்சுட்டுதோன்னு நினைச்சார். ரொம்பவும் மனம் கலங்கிப் போய் நாடகப் படுதாவை விடச் சொல்லிட்டார்.
அந்த சமயத்துல, ராஜரத்தினம் பிள்ளை மட்டும் முன் வரிசையில உட்கார்ந்திருக்கிறது தெரிஞ்சுது.
அவரை உடனே மேடைக்கு வரவழைச்சார், தன் மனக் கஷ்டத்தை சொன்னார்.
'நீங்க, அந்த காபி ராகத்தை ரொம்ப பிரமாதமா பாடினீங்க. அது மனசுல நிக்கிற இந்த சமயத்துலயே மறந்துடாம அதை பாடி சாதகம் பண்றதுக்காக, அந்த இசை மேதைகளெல்லாம் எழுந்திரிச்சு போயிருக்காங்க; என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனாங்க...' என, ராஜரத்தினம் பிள்ளை சொன்னதும், அவருக்கு ரொம்ப ஆச்சரியமா போயிட்டுது.
அந்த அளவுக்கு, கிட்டப்பா, இசை மேதையாக இருந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.