மு.அப்பாஸ் மந்திரி எழுதிய, '200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்' நுாலிலிருந்து:
1br@தம் குருநாதர் ராமதாசர் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர், மராட்டிய சத்ரபதி சிவாஜி. ஒருமுறை, குருவுக்கு காணிக்கையாக, தங்கக் காசுகளும், நவரத்தினங்களும் அனுப்பி வைத்தார்.
அதற்கு பதிலாக, கைப்பிடி அளவு மண்ணும், சில கூழாங்கற்களும், ஒரு குப்பியில் குதிரை சாணமும் வைத்து கொடுத்தனுப்பினார், குரு ராமதாசர்.
மகிழ்ச்சியுடன் அந்த பொருட்களை பணிவுடன் கண்களில் ஒற்றிக் கொண்டார், வீர சிவாஜி. இதைப் பார்த்த சிவாஜியின் தாய்க்கு, கோபம் கோபமாக வந்தது.
'மகனே, நீ என்ன செய்கிறாய்... உன் குருநாதருக்கு, நீ உயர்ந்த பொருளை அனுப்பி வைத்தாய். அவர், பதிலுக்கு, உன்னை இழிவுபடுத்துவது போல், இப்படிப்பட்ட பொருட்களை அனுப்பியுள்ளாரே...' என்றார்.
அதற்கு சிவாஜி, 'அம்மா, நீங்கள் என் குருநாதரின் பெருமை தெரியாமல் இப்படிப் பேசுகிறீர்கள். இந்த மூன்று பொருட்களையும் அவர் ஏன் அனுப்பியிருக்கிறார் தெரியுமா? அவர் அனுப்பிய இந்த மண், நான் இந்த நாட்டை ஆள்வேன் என்கிறது.
'இந்த கூழாங்கற்கள், நான் மாபெரும் கோட்டைகளை கட்டுவேன் என்று என்னிடம் சொல்கின்றன. இந்த குதிரை சாணம், வலிமையான பெரிய குதிரைப் படை ஒன்றை நான் அமைப்பேன் என்பதை உணர்த்துகிறது. இது எல்லாம் எதிர்காலத்தில் கண்டிப்பாக நடக்கும்...' என்றார்.
ஆங்கிலத்தில், துப்பறியும் நாவல்கள் எழுதி உலகப் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர், அகதா கிறிஸ்டி. ஹெர்குலி பாய்ராட் மற்றும் மிஸ் மார்ப்பிள் ஆகிய துப்பறியும் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளரை திருமணம் செய்து கொண்டார்.
ஒருநாள், இவரிடம், 'தொல்பொருள் ஆராய்ச்சியாளரை மணந்து கொண்டீர்களே, இதில் தங்களுக்கு நன்மை ஏதேனும் உண்டா...' என்று கேட்டார், நண்பர்.
'பொதுவாக எல்லா ஆண்களுமே, தங்கள் மனைவியருக்கு வயது ஆக ஆக அவர் மேல் உள்ள ஆர்வத்தை இழந்து விடுவர். ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளரான கணவரோ, எனக்கு வயது ஏற ஏறத்தான், அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்...' என்று சொல்லி சிரித்தார், அகதா கிறிஸ்டி.
உலகப் புகழ்பெற்ற ஆங்கில துப்பறியும் நாவலாசிரியர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்.
ஒருசமயம், அவரிடம், 'கதாநாயகன், வில்லனைக் கொல்லும்போது துப்பாக்கியால், 'டுமீல் டுமீல் டுமீல்' என்று, மூன்று முறை சுட வைக்கிறீர்களே. ஒரே குண்டில் அவனை சாகடிக்கக் கூடாதா...' என்று கேட்டார், அவரது நண்பர்.
'நண்பரே, நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எனக்கு பணம் தருகின்றனர். அதனால் தான் வில்லன், மூன்று குண்டுகளில் சாகிறான்...' என்றார், சேஸ்.
- நடுத்தெரு நாராயணன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.