கூண்டு முறை கோழி வளர்ப்பே லாபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2022
08:00

நாட்டுக் கோழிகளை கூண்டு முறையில் வளர்த்தால் காகம், பருந்து, வல்லுாறுகளால் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் இறப்பைத் தவிர்க்கலாம். முறையான வளர்ப்பில் 100க்கு 95 குஞ்சுகளுக்கு மேலாக வளர்த்து விற்பனை செய்ய முடியும். கூண்டு முறையில் இறப்பு 4 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். சுகாதாரமான முறையில் தீவனம், தண்ணீர் அளிக்க முடியும். கோழிகள் நோயின்றி வளரும். தடுப்பூசி செலுத்துவதும் எளிது.

ஏழாவது நாள் மற்றும் 8வது வாரத்தில் வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி செலுத்தினால் நோய்த் தாக்காமல் ஆரோக்கியமாக வளர்க்க முடியும். தேவைப்படும் போது கோழிகளின் அலகை வெட்டுவதுடன், வெளிப்புற ஒட்டுண்ணிகளை நீக்குவதும் எளிது. குறைந்த தீவனம் உட்கொண்டு அதிக உடல்எடை பெறும். தேவையான சத்துக்கள் அடங்கிய அடர்தீவனம் அளித்தால் மூன்று மாதங்களில் சராசரியாக ஒரு கிலோ உடல் எடை அதிகரிக்கும். இந்த உடல் எடை பெறுவதற்கு 3 முதல் 3.5 கிலோ தீவனம் உட்கொள்ளும்.

6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட நான்கு கூண்டுகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் தலா 10 கோழிகளை ஒன்றரை கிலோ உடல் எடை அடையும் வரை வளர்க்கலாம். கூண்டின் கீழேயும் இதேபோல் கம்பி வலை அமைத்து 4 அறைகளாகப் பிரித்தால் 80 கோழிகளை குஞ்சு பொரித்தது முதல் 5 மாதங்கள் வரை வளர்க்கலாம்.

எச்சமானது கூண்டின் அடிப்புற தட்டில் விழுவதால் சுத்தப்படுத்துவதும் எளிது. ஒரே கூண்டில் 2 முதல் 3 அடுக்குகள் வரை வைத்து நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம். மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கிராமம், நகர்ப்புறங்களில் வளர்த்து நல்ல லாபம் பெறலாம்.

- உமாராணி,
பேராசிரியர் கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,தேனி.
hamleshharini@gmail.com

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X