செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு, டிச.,8ம் தேதி நாளை விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.
99405 42371