சூரியனின் பிறந்த நாள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2023
08:00

ஜன., 28 ரத சப்தமி

ஒரு விநாடி கூட ஓயாமல், 24 மணி நேரமும், காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருப்பவர் யார் தெரியுமா? சூரிய பகவான் தான்.

பஞ்சாங்கத்தில் திதி என்ற ஒரு பகுதி இருக்கும். அமாவாசை முதல் சதுர்த்தசி வரை, 15 திதிகள், வளர்பிறை சார்ந்தவை. பவுர்ணமி முதல் சதுர்த்தசி வரை உள்ள, 15 திதிகள், தேய்பிறை சார்ந்தவை.

ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. பிரதமை, அஷ்டமி, நவமி போன்ற திதிகளில், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. திதிகளில் ஏழாவதாக வரும் சப்தமி சுப நிகழ்ச்சி நடத்த ஏற்றது. அதிலும் தை மாதம் வரும் வளர்பிறை சப்தமி திதி, மிகவும் முக்கிய வாய்ந்தது. இதை, 'ரத சப்தமி' என்பர்.

சப்தமி திதியின் அதிபதி, சூரிய பகவான். தை முதல் தேதியில், சூரியனின் ரதம் வடக்கு நோக்கிய பயணத்தை துவங்குகிறது. தை வளர்பிறை சப்தமியன்று தான், அந்தப் பாதையில், தன்னை நிலை நிறுத்துகிறது. இதனால், இதற்கு ரத சப்தமி என பெயர் வைத்தனர்.

ரத சப்தமியை சூரியனின் பிறந்த நாள் என்பர். சப்தமியை தன் பிறந்த திதியாக சூரியன் கொள்வதற்கு காரணங்கள் உண்டு. வளர்பிறை சப்தமியில் பிறந்தவர்கள், பயணம் செய்வதற்கு மிகவும் விரும்புவர். ஓரிடத்தில் நிற்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி.

சூரிய பகவானைப் பொறுத்தவரை, இது, 100 சதவீதம் பொருந்தும். அவர், தீபாவளி, பொங்கல், பனிக்காலம் மற்றும் மழையிலும் ஒளிர்வார். விடுமுறை எடுக்காத இவரது பயணம், ஒரு நொடி கூட நிற்பதில்லை.

பயணம் செய்யும் போதே, தாவரங்களுக்கு தன் ஒளி மூலம் உணவளிப்பவர். அதிலிருந்து கிடைக்கும் உணவு வகைகள், உலகிலுள்ள அத்தனை ஜீவன்களின் பசியையும் தீர்க்கிறது. இது ஒரு மாபெரும் சேவை. அது மட்டுமல்ல, இவர் கண்கண்ட தெய்வமும் கூட.

சிவன், பார்வதி மற்றும் திருமாலை, நாம் மனக்கண்ணால் தான் தரிசிக்க முடியும். கோவில்களுக்கு போனால், சிலை வடிவில் பார்க்கலாம். ஆனால், நம் கண் முன் தினமும் தெரிபவர், சூரியன்.

ரத சப்தமியன்று திருப்பதியில், அதிகாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை ஏழு வாகனங்களில் உலா வருவார், பெருமாள். ஒரே நாளில், ஏழு சப்பர பவனி என்பது, இங்கு மட்டுமே நடக்கிற விசேஷம்.

சப்தமி திதிக்கு மற்றொரு சிறப்பம்சம் உண்டு. இவர்கள், கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள். இலக்கணப் புலமை மிக்கவர்கள். சூரியன் அனைத்து இலக்கணமும் அறிந்தவர். இவருக்கு, வியாகரண பண்டிதர் என்ற பட்டம் உண்டு. வியாகரணம் என்றால், இலக்கணம்.

இதனால் தான் சூரியனை, தன் குருவாக ஏற்றார், அனுமன். இதன் மூலம் சகலகலாவல்லவர் என்ற பெயர் பெற்றார். சூரியனை வணங்கினால், உடல் நலமும் நன்றாக இருக்கும்.

உலகத்தின் முதல்வரான. சூரிய பகவானை அவரது பிறந்த நாளான, ரத சப்தமியன்று வணங்கி, அருள் பெறுவோம்.
தி. செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X