அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2023
08:00

அன்புள்ள அம்மா -

நான், 29 வயது பெண். படிப்பு: பி.காம்., முதலாமாண்டு படித்தபோது, விபத்து ஒன்றில் பெற்றோரை இழந்தேன். உறவினர் ஒருவர் எனக்கு அடைக்கலம் தந்தார்.

உறவினர் மகன் மீது ஏற்பட்ட காதலால், கல்லுாரியில் படிக்கும்போதே கர்ப்பமானேன். அவசர அவசரமாக திருமணம் முடித்து, தனிக்குடித்தனம் வைத்து விட்டனர்.

திருமணமான இரண்டாம் ஆண்டு, எனக்கு மூச்சு திணறல் ஏற்பட, மருத்துவமனையில் சேர்த்தார், கணவர். இதயத்தில் அடைப்பு இருப்பதாக இடியை இறக்கினார், மருத்துவர்.

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியதில் இருந்து, என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார், கணவர். அதுமட்டுமல்லாமல், மது அருந்தவும் ஆரம்பித்தார்.

கணவரின் பெற்றோரோ எதையும் கண்டு கொள்ளாமல் விலகி விட்டனர். கணவரை திருத்த முடியாமல் தவிக்கிறேன். என் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. நான் என்ன செய்யட்டும், அம்மா.

— இப்படிக்கு,
அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —

உன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவனுக்கு, உன் சிறு உடல் பிரச்னை பூதாகரமாக தெரிகிறதே. அப்படியென்றால் அவனின் காதல் பொய்யானதாக தோன்றுகிறது. இதே பிரச்னை அவனுக்கு இருந்தால், அவனை நெஞ்சில் வைத்து நீ பராமரிப்பாய் அல்லவா?

அடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* அடுத்தமுறை, நீ இதயநோய் சிறப்பு மருத்துவரிடம் செல்லும்போது, கணவரையும் உடன் அழைத்துப் போ. '13 சதவீத பெண்களுக்கு, தமிழகத்தில் இதய பிரச்னை உள்ளது. உன் மனைவிக்கு இருக்கும் பிரச்னையை முழுமையாக கட்டுபடுத்தலாம். தாம்பத்யம் தடைபட வாய்ப்பில்லை. தொடர் மருத்துவமும், அனுசரணையான அன்புமே, மனைவியை சுகப்படுத்தும்...' -என, கணவரிடம் கூறட்டும், மருத்துவர்

* உன் மீதான வெறுப்பை தவிர்க்கவும், குடி பழக்கத்தை நிறுத்தவும், கணவருக்கு தகுந்த மன நல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்

* உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறை

* மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிடு

* பாதியில் நிறுத்திய இளங்கலை வணிகவியல் படிப்பை, தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் தொடர். எதாவது ஒரு வேலைக்கு போ

* 'நான் இதய நோயாளி' என்ற பாவனையை துாக்கி எறி. 'இவள் இதய நோயாளி' என்ற தோற்றம், உன் உடலில் தெரியாத வண்ணம், உடல்மொழியை அமைத்துக் கொள்

* சீக்கிரமே ஒரு குழந்தை பெற்றுக் கொள். கணவன் -- மனைவிக்கிடையே ஆன பிணக்குகளை பெரும்பாலும் குழந்தைகள் தீர்த்து வைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் செய்தாலே, கேள்விக்குறியான உன் வாழ்க்கையை ஆச்சரியக்குறியாக்கும் மகளே!

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
R Ravikumar - chennai ,இந்தியா
28-ஜன-202312:01:48 IST Report Abuse
R Ravikumar உறவு வைத்து கொண்டால் , தாங்கி கொள்ள முடியாமல் இறந்து விடுவாளோ .. என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம் . ஒருவேளை தன்னுடைய ஆசை மனைவி இதய நோயால் இறந்து விடுவாள் என்ற பயத்தினை , குடி பழக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறாரோ என்னமோ மனசு விட்டு பேசினால் அல்லது நல்ல மருத்துவரின் ஆலோசனை இருந்தால் இதில் இருந்து வெளி வரலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X