இருமல், நரம்புத்தளர்ச்சி, வாய் நாற்றம், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது, வசம்பு.
வசம்பை துாளாக்கி, வெட்டுக் காயத்தின் மேல் கட்ட, காயம் ஆறிவிடும்.
வசம்பை சுட்டுத் துாளாக்கி, சுக்குத் துாளுடன் கலந்து வயிற்றில் தடவினால், உப்புசம் குறையும்.
சுட்டுத் துாளாக்கிய வசம்பை, தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்க, பசி ஏற்படும்; நன்கு பால் குடிக்கும்.
குழந்தைகளை குளிப்பாட்டியதும், வசம்பைச் சுட்டு உரைத்து, கால்களின் அடிப்பாகத்திலும், தொப்புளைச் சுற்றிலும் பூசி வர, எந்த நோய்களும் அண்டாது.
ஒரு துண்டு வசம்பு, ஒரு துண்டு மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து, பொன்னுக்கு வீங்கி எனப்படும் கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்க நோய்க்கு பற்றுப்போட, விரைவில் குணமாகும்.
வசம்பு, அதிமதுரம் சேர்த்து, நீரை காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், இருமல், காய்ச்சல், சளி அனைத்தும் நீங்கும்.
காசு கட்டியுடன், (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) சிறிது வசம்பு சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றுப்போட, நாளடைவில் கீழ்வாத நோய் நீங்கும்.
வசம்பை, அம்மியில் வைத்து துாள் செய்து, சிறிதளவு தேனில் குழைத்து அதிகாலையில் தினமும் சாப்பிட்டு வந்தால், திக்குவாய் குணமடையும்.
தொகுப்பு: ஆர்.ஜெயலட்சுமி