வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து, வோகோ மாவட்டத்தை சேர்ந்த, சாங்த்தி என்ற பழங்குடி மக்கள், ஆமூர் பால்கன் என்ற பறவை இனத்தை வேட்டையாடி, விற்று பிழைப்பு நடத்தி வந்தனர்.
'தொடர்ந்து வேட்டை யாடினால், இந்த பறவை இனம் அழிந்து விடும்...' என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர், இயற்கை வள பாதுகாப்பாளர்கள். இதனால், தங்கள் வருமானம் இழந்ததாக, இவர்களில் பலர் ஒப்பாரி வைத்தனர்.
இருப்பினும், மக்கள் மத்தியில் பறவைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. ஒரு சிலர் மட்டும் பறவை வேட்டையில் ஈடுபட்டு, மாட்டிக் கொள்கின்றனர்.
இதையடுத்து, மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த சில பறவை இனங்கள், இயற்கை பாதுகாவலர்களின் முயற்சியால் இப்போது அதிகரித்து வருகிறது.
ஜோல்னாபையன்