மானாவாரியில் அவுரி சாகுபடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2023
08:00



மானாவாரியில் கூடுதல் வருமானம் பெற அவுரி சாகுபடி செய்யலாம்.

முதல் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் அறுவடையானது தற்போது நடைபெறுகிறது. மானாவாரி மற்றும் இறவை நிலங்களில் 2ம் போகத்தில் குறைந்த செலவில் வருமானம் பெற மூலிகைப் பயிரான அவுரி சாகுபடி செய்யலாம். அவுரி சாகுபடிக்கு குறைந்தநீர் போதும் என்பதால் நீர்ப் பற்றாக்குறையுள்ள பாசன நிலங்களில் 2ம் பருவத்தில் அவுரி சாகுபடி லாபம் தரும்.

சுழல்கலப்பை கொண்டு உழுவதற்கு முன், ஏக்கர் ஒன்றுக்கு நல்ல முளைப்புத்திறன் உள்ள 3 முதல் 4 கிலோ அவுரி விதையை விதைக்க வேண்டும். சுழல்கலப்பை கொண்டு உழும்போது நிலத்தை உழுவதற்கும் பயிர் முளைப்பதற்கும் சரியாக இருக்கும்.

குளிர்கால மழை தை - மாசி மாதங்களிலும், கோடை மழை பங்குனி சித்திரையில் பெய்யும் போது, மழைநீரை கொண்டே அவுரி நன்கு வளரும். 45 நாட்களுக்கு ஒரு அறுவடை வீதம் இரண்டு முறை அறுவடை மேற்கொள்ளலாம். ஒரு அறுவடையில் ஏக்கருக்கு 2 - 3 குவிண்டால் இலை வீதம் 2 அறுவடைக்கு சராசரியாக 5 குவிண்டால் மகசூல் பெறலாம். ஒரு குவிண்டால் சராசரியாக ரூ.3000 முதல் ரூ.3500 வரை கிடைக்கும் என்பதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். இப்பயிரானது ஆணிவேர் பயிர் என்பதால் நிலத்தின் அடிப்பரப்பில் உள்ள சத்துக்களைப் பயன்படுத்தி வளரும். எனவே சாகுபடி செலவும் குறையும்.

இது, நல்ல பசுந்தாள் உரம் என்பதால் நிலத்தின் வளத்தை பெருக்க விரும்பும் விவசாயிகள் அப்படியே மடக்கி உழுது உரமாக பயன்படுத்தலாம். இதன்மூலம் மண்ணின் அங்ககச் சத்து அதிகரித்து மண்ணின் வளம் மேம்படும். மண்புழு மற்றும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இப்பயிர் நிலத்தில் இருக்கும் போது ஆட்டுக்கிடை அமர்த்தினாலும் பயிருக்கு சேதம் ஏற்படாது.

-மகாலட்சுமி, விதைப் பரிசோதனை அலுவலர், ராமசாமி, சாய்லட்சுமி சரண்யா, வேளாண் அலுவலர்கள், விதைப் பரிசோதனை மையம், விருதுநகர்.99528 88963

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
31-ஜன-202305:24:12 IST Report Abuse
NicoleThomson அவுரி விலை இப்போது அதிகரித்து விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X